1) சகோதர அன்புள்ளவன் - ஆதி 42:24, 43:30, 45:1,2
2) பாடுகளை பொறுமையாக சகித்தான் - ஆதி 37:24
3) போத்திபார் மனைவி யோசேப்பின் மிது குற்றம் சாட்டிய போது அவன் வாய் திறக்கவில்லை - (ஏசா 53:7)
4) மற்றவர்களை குறை கூறவில்லை (சிறையில் இருந்து போது போத்திபார் மனைவிதான் இதற்கு காரணம் என்று அவளை குறை கூறவில்லை)
4) துன்பத்தில் இருந்தாலும் மற்றவர்களுக்கு ஆறுதல் கூறினான் (ஆதி 40:7)
5) எல்லா இடத்திலும் தேவனை உயர்த்தினான் (ஆதி 41:16)
6) பரிசுத்தவானாக காணப்பட்டான் - ஆதி 40:15
7) யோசேப்பு (எகிப்தின் அதிபதியாக இருக்கும் போது) தகப்பனை முதல் முதலாக பார்த்தபோது அண்ணன்மார் தனக்கு செய்த செயல்களை தகப்பன் இடம் கூறவில்லை.
8) மன்னிக்கிற சுபாவம் காணப்பட்டது (தன் சகோதரர்களை மன்னித்தான்)
9) சகோதரர்கள் செய்த தீங்கை மறந்தான்.
10) சகோதரர்களை பழிவாங்கவில்லை (பழிவாங்க சகல அதிகாரமும் இருந்தது = எகிப்தின் அதிபதியாக)
11) பொறுமையுடன் காத்திருந்தான் (தான் கண்ட சொப்பனம் நிறை வேற 13 வருடம் காத்திருந்தான்)
12) தகப்பன் இருதயத்துக்கு மிகவும் பிரியமானவன் (பலவருண அங்கி. கிடைத்தது) - 37:3
13) கீழ்படிதல் காணப்பட்டது (தகப்பனார் அவனை சகோதரர் இடம் போக சொன்னவுடன் இதோ போகிறேன் என்றான். சகோதரர் என்னை பகைப்பதை அறிந்தும் நீர் என்னை அவர்களிடம் அனுப்பலாமா என்று கேட்கவில்லை)
14) முறுமுறுப்பு அவனது வாழ்க்கையில் எங்கும் காணப்பட வில்லை (சகோதரர்கள் அவனது சட்டைகளை கழற்றிய போதும், அவனை குழியில் இறக்கிய போதும் "உங்களுக்கு சாப்பாடு கொண்டு வந்த எனக்கு ஏன் இப்படி செய்கிறிர்கள" என்று கேட்கவில்லை
15) கர்த்தர் அவனோடு இருந்தார் - ஆதி 39:2
16) தேவ பயம் உள்ளவன் - ஆதி 42:18
17) யோசேப்பின் நிமித்தம் கர்த்தர் போத்திபாரின் வீட்டை ஆசிர்வதித்தார் - 39:5 (உன் நிமித்தம் கர்த்தர் உன் வீட்டை ஆசிர்வதித்திருக்கிறாரா ?)
18) தாழ்மையுள்ளவன் (நான் அல்ல என்கிறான்) - ஆதி 41:16, 45:8
19) மற்றவர்களுக்கு உதவி செய்தான் (பார்வோனின் பிரதானிகளின் இருவருடைய சொப்பனத்திற்கு அர்த்தம் கூறினான்)
20) சகோதரர் மிது பாசம் உள்ளவன் (சகோதர்களை கண்ட போது 5 முறை அழுதான்) ஆதி 42:24,:43:29,20, 45:1-3, 45:14, 45:15
21) பெற்றோர் மிது பாசம் உள்ளவன் (தன் தகப்பன் யாக்கோபை கண்ட போது அவன் கழுத்தை கட்டி கொண்டு வெகு நேரம் அழுதான் - ஆதி 46:29
22) தீமைக்கு நன்மை செய்தான் - ஆதி 50:18-21
0 comments:
Post a Comment