அப்பொழுது நாம் அறிவடைந்து, கர்த்தரை அறியும்படி தொடர்ந்து போவோம்.
• (ஓசியா.6:3).
ஒரே நேரத்தில் அல்ல படிப்படியாகத் தூய அறிவை அடைவோம். விடாமுயற்சியுடன் சிறிது சிறிதாக் கற்பதே நம் கடமையாகும். மெதுவாகவே முன்னேற்றம் அடைவதைக் குறித்து நாம் நம்பிக்கையை இழக்க வேண்டியதில்லை. ஏனெனில் நாம் எப்படியும் அறிவடைவோம். இதெப்படியெனில் நாம் எவ்வளவு தாமதமாக விளங்கிக் கொண்டாலும் நம் போதகர் ஆகியுள்ள ஆண்டவர் தம் முயற்சியை விட்டுவிட மாட்டார். ஏனெனில் மக்களுடைய முட்டாள்தனத்தினால் அவர் முயற்சி தோல்வியடைவது அவருக்குப் பெருமை அளிக்காது. சாதாரணமான மக்களை ஞானிகளாக்குவதில் ஆண்டவர் மகிழ்ச்சி அடைகிறார்.
தனித்தனி கொள்கைகளைப் பற்றி அலசுவதிலன்றி முக்கியமான கருத்தை மனதில் வைத்து, யேகோவாவைப் பற்றியே அறிந்து கொள்வது நம் கடமையாகும். பிதா, குமாரன், பரிசுத்த ஆவி ஆகிய மூவரில் ஒருவரான கடவுளை அறிந்து கொள்வதே நித்தியஜீவனாகும். இதையே நம் நோக்கமாகக் கொள்வோமாக! ஏனெனில் இவ்விதம் நாம் அறியவேண்டியவைகளையெல்லாம் அறியலாம். ஆண்டவரைப்பற்றி அறிந்து கொள்ள முயன்றால் கிழிக்கப்பட்டபின் சுகமடைவதையும், நொறுக்கப்பட்டபின் கட்டப்படுவதையும், மரணத்திற்குப்பின் உயிர் அடைவதையும் பற்றிக் கற்றுக்கொள்வோம். சர்வ வல்லமையுள்ள ஆண்டவரின் பாதையில் முழுமனதுடன் சென்றால், நாம் அடையும் அனுபவங்கள் மூலம் கற்க வேண்டியவைகளைக் கற்றுக்கொள்வோம்.
என் ஆன்மாவே, இயேசுவுக்கு நெருங்கி வாழ்ந்து, இயேசுவில் கடவுளை அறிந்து கொள்ள தொடர்ந்து முற்பட்டால் சாஸ்திரங்கள் எல்லாவற்றிலும் சிறந்ததான கிறிஸ்துவைப்பற்றி அறிந்துகொள்வாய். பரிசுத்த ஆவி சகல சத்தியத்துக்குள்ளும் நடத்துவார். இது அவருடைய கிருபை நிறைந்த முயற்சி அல்லவா? இதை நிறைவேற்ற அவர் மேல் சார்ந்திருங்கள்.
0 comments:
Post a Comment