Top Social Icons

வாழ்க்கைப் பயணத்திற்கு பெலன்





ஆண்டவராகிய கர்த்தர் என் பெலன்; அவர் என் கால்களை மான் கால்களைப்போலாக்கி, உயரமான ஸ்தலங்களில் என்னை நடக்கப்பண்ணுவார்.

• (ஆபகூக் 3:19).

கிறிஸ்தவ வாழ்க்கையைச் சித்தரிக்கும் ஒரு கதை உயர்ந்த ஸ்தலங்களில் பின்னங்கால்கள் (Hinds Feet on High Places) என்ற உருவகக்கதை, ஆபகூக் 3:19 ஐ அடிப்படையாகக் கொண்டது. இந்தக் கதை “அதிக-அச்சம்”  (Much-Afraid) என்ற கதாபாத்திரம் “மேய்ப்பரோடு” (Shepherd) செல்லும் பயணத்தைப் பற்றியது.

“அதிக-அச்சம்” பயத்தின் மிகுதியால் “மேய்ப்பர்” தன்னை தூக்கிச் செல்லும்படி கேட்கிறாள்.

“நீயாக ஏறி வரட்டும் என்று உன்னை இங்கே விட்டுச் செல்லாமல், உயர்ந்த ஸ்தலங்கள் வரைக்கும் உன்னைத் தூக்கிச் செல்ல என்னால் முடியும். ஆனால், நான் அவ்வாறு செய்தால், உன்  பின்னங்கால்கள் நன்றாக பலப்படாது. என் துணையாக நான் போகும் இடங்களுக்கு உன்னால் என்னோடு வர முடியாது” என்று மேய்ப்பர் அன்போடு சொல்கிறார்.

பழைய ஏற்பாடு ஆபகூக்குடைய கேள்விகளை (உண்மையைச் சொன்னால், என் கேள்விகளும்கூட) “அதிக அச்சம்”  எதிரொலிக்கிறாள், “நான் ஏன் துன்பம் அனுபவிக்க வேண்டும்?” “என் பயணம் ஏன் கடினமாக இருக்க வேண்டும்?”

ஆபகூக் கி.மு. 7 ம் நூற்றாண்டின் இறுதியில், இஸ்ரவேலர் அடிமைகளாவதற்கு முன் யூதாவில் வசித்து வந்தார். இந்த தீர்க்கதரிசி வாழ்ந்த சமுதாயம், சமூக அநீதியை தட்டிக் கேட்காமல் இருந்தது. பாபிலோனியர் எப்போது வேண்டுமானாலும் படையெடுத்து வரலாம் என்ற பயத்திலேயே வாழ்ந்தார்கள் (ஆப. 1:2-11). ஆண்டவர் தலையிட்டு கஷ்டத்தை நீக்கும்படி ஆபகூக் ஆண்டவரிடத்தில் கேட்டார் (1:13). ஆண்டவர் தன்னுடைய வேளையில் நியாயம் செய்வதாகக் கூறினார் (2:3).

ஆபகூக் விசுவாசத்தில் கர்த்தரைநம்பினார். அந்தக் கஷ்டம் நீங்காவிட்டால் கூட கர்த்தர்தன்னுடைய பெலனாக இருப்பார் என்று இந்த தீர்க்கதரிசி நம்பினார்.

நம் கஷ்டத்தை பொறுத்துக்கொள்ள நம் பெலனாக இருந்து ஆண்டவர் உதவி செய்வார் என்பதில் நாமும் ஆறுதல் பெறலாம். கிறிஸ்துவுடனான நம் ஐக்கியத்தை வலுப்படுத்த நமது வாழ்க்கைப் பயணத்தின் கடினமான சவால்களை ஆண்டவர் உபயோகிப்பார்.

••ஜெபம்•• 🌹🙇🏻‍♂🔆

ஆண்டவரே, என்னுடைய கஷ்டம் சில சமயங்களில் தாங்க முடியாததாக இருக்கிறது. ஆனாலும், இதுபோன்ற கடினமான சந்தர்ப்பங்களில் கூட என்னை பெலப்படுத்துவதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். உம்மேல் நம்பிக்கை வைக்கவும், இந்த வாழ்க்கையில் தொடர்ந்து உம்மோடு நடக்கவும் உதவி செய்யும்.

•▶ கஷ்டமான நேரங்களில் கர்த்தர் நம்பெலனாக இருப்பார் என்று நம்புவோம்.
SHARE

Milan Tomic

Hi. I’m Designer of Blog Magic. I’m CEO/Founder of ThemeXpose. I’m Creative Art Director, Web Designer, UI/UX Designer, Interaction Designer, Industrial Designer, Web Developer, Business Enthusiast, StartUp Enthusiast, Speaker, Writer and Photographer. Inspired to make things looks better.

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

உங்கள் நாமம் பரலோகில் எழுதப்பட்டுள்ளது

“உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள்.” • (லூக்கா 10:20). பிரியமானவர்களே, ஆவிகள் உங்களுக்குக் கீழ்...