Top Social Icons

ஆன்மாவின் மரணத்திலிருந்து



என் ஜனங்களே, நான் உங்கள் பிரேதக் குழிகளைத் திறந்து உங்களை உங்கள் பிரேதக்குழிகளிலிருந்து வெளிப்படப்பண்ணும் போது, நான் கர்த்தர் என்று அறிந்து கொள்வீர்கள்.

• (எசேக்கியேல்.37:13).

அவ்விதமாகவே நடைபெறும். மரணமடைந்து, பின் உயிர் பெறுகிறவர்கள் அவ்விதமான உயிர்த்தெழுதல் கடவுளால் மட்டுமே ஆகக்கூடியது என்று கண்டிப்பாக அறிந்துகொள்வார்கள். இவ்விதம் ஆன்மீக மரணமடைந்து, பிரேதக்குழியிலிருந்து வெளிப்படப் பண்ணி, ஆன்மீக வாழ்வின் ஒளியிலும் விடுதலையிலும் மகிழ்ச்சி அடைவதே ஒரு மனிதன் அடையக்கூடிய மாறுதல்களில் எல்லாம் பெரியதும் குறிப்பிடத்தக்கதும் ஆகும். எப்பொழுதும்; உயிருள்ளவராயிருக்கும் கடவுளும், ஆண்டவரும், உயிர் கொடுப்பவருமான கடவுளைத் தவிர வேறுயாரும் இதைச்செய்ய முடியாது.

உலர்ந்த எலும்புகளின் பள்ளத்தாக்கில் மற்ற எலும்புகளைப் போலவே உலர்ந்து நானும் கிடந்ததை நன்றாக நினைவு கூருகிறேன். இலவசமானதும் ஆற்றல் வாய்ந்ததுமான கிருபை என் மீது தீர்க்க தரிசனம் உரைக்கக் கடவுளின் மனிதனை அனுப்பின நாள் ஆசீர்வதிக்கப்பட்ட நாளாகும். நம்பிக்கை நிறைந்த வார்த்தைகள் உலர்ந்த எலும்புகள் மத்தியில் ஏற்படுத்தின அசைவுக்காகக் கடவுளுக்கு மகிமை உண்டாவதாக! நான்கு திசையிலிருந்தும் வந்து என்னை உயிரடையச் செய்த பரலோகத்தின் ஆவி மிகவும் மங்கள கரமானதாகும். நித்திய காலமாய் உயிரோடிருக்கும் யேகோவாவின் உயிரளிக்கும் ஆவியைப் பற்றி இப்போது நான் நன்றாக அறிந்துள்ளேன். உண்மையாக யேகோவாவே உயிருள்ள ஆண்டவர். ஏனெனில் அவர் என்னை உயிரடையச் செய்தார். என்னுடைய புது வாழ்க்கை ஏக்கங்களும் துக்கங்களும் உள்ளதாய் இருந்தாலும் ஆண்டவர் கொல்லவும் உயிரடையச் செய்யவும் கூடியவர் என்பதை நிரூபிக்கிறது. அவர் ஒருவரே கடவுள் சிறப்பும், கிருபையும், மகிமையும் எல்லாம் அவரே உயிரடைந்த என் ஆன்மா எல்லாவறு;றுக்குமு; உரியவராக அவரை வணங்குகிறது. அவர் தூய நாமத்துக்கு எல்லா மகிமையும் உண்டாவதாக! நான் உயிரோடிருக்கும் வரை அவரை மகிமைப்படுத்துவேன்.
SHARE

Milan Tomic

Hi. I’m Designer of Blog Magic. I’m CEO/Founder of ThemeXpose. I’m Creative Art Director, Web Designer, UI/UX Designer, Interaction Designer, Industrial Designer, Web Developer, Business Enthusiast, StartUp Enthusiast, Speaker, Writer and Photographer. Inspired to make things looks better.

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

உங்கள் நாமம் பரலோகில் எழுதப்பட்டுள்ளது

“உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள்.” • (லூக்கா 10:20). பிரியமானவர்களே, ஆவிகள் உங்களுக்குக் கீழ்...