நான் ஆதியாகமம் உணவகத்திற்கு, யாத்திராகமம் சாலை வழியாகச் சென்றேன். போகும் வழியில் நான் , லேவி என்பவர் , எண்களைப் பதிவு செய்தபடி உபாகமத்தின் மக்களைக் கணக்கெடுத்துக் கொண்டிருப்பதைக் கண்டேன். அந்த நேரத்தில் யோசுவா , நியாயாதிபதிகளின் அழகிய கதவில் நின்றபடி ரூத் என்பவள்"சாமுவேல் , சாமுவேல் " என்று சத்தமாக அழைத்துக் கொண்டிருந்த போது அவளுக்காகக் காத்துக் கொண்டிருந்தார்.
ஒரு கட்டத்தில் , முதலாம் ராஜாக்களும் , இரண்டாம் ராஜாக்களுமாய் இருந்த , நாளாகமங்களின் ராஜாக்கள், எஸ்றாவையும் , நெகேமியாவையும் , எஸ்தரையும், அவர்களது சகோதரன் யோபு அடைந்திருந்த துரதிருஷ்டமான நிலைமையின் நிமித்தமாக சந்திக்க வந்து கொண்டிருந்தனர்.
அவர்கள் சங்கீதம் பாடத்தொடங்கியபடிக் குழந்தைகளுக்கு நீதிமொழிகளைப் பிரசங்கித்து சாலமோனின் உன்னதப்பாட்டைக் கற்பித்தனர்.
இதே கால கட்டத்தில் சக நிகழ்வாக,
ஏசாயா, எரேமியாவின் புலம்பலை,
எசேக்கியேல், தானியேல், ஓசியா , யோவேல் என்ற நண்பர்களுடன் கேட்டுக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் ஆமோஸும் , ஒபதியாவும் அருகில் இல்லை.
மூன்று நாட்களுக்குப் பிறகு யோனா , மீகாவும், நாகூமும் எருசலேமுக்குப் பயணம் செய்த கப்பலிலேயே பயணித்தார். ஆபகூக் , அதன் பிறகு செப்பனியாவை சந்திக்க, அவர் ஆகாய் எனப்பட்ட சகரியாவின் நண்பரும் , மல்கியாவின் ஒன்று விட்ட சகோதரரும் ஆனவரை அறிமுகப் படுத்தினார்.
உடனடியாக சம்பிரதாயப்படி, மத்தேயு , மாற்கு , லூக்கா, யோவான் என்பவர்கள், அப்போஸ்தலருடைய நடபடிகளின்படி , ரோமர், Iகொரிந்தியர் போல நடந்து கொள்ளுவதில் கவனம் செலுத்தினர். ஏனென்றால் II கொரிந்தியர் கூட்டத்தினர் எப்பொழுதும் கலாத்தியரிடம் சண்டையிடுபவர்களாக இருந்தனர்.
அந்த நேரத்தில் அவர்கள் உணர்ந்து கொண்டதாவது, எபேசியரும் , பிலிப்பியரும் கொலோசேயருக்கு நெருக்கமானவர்கள் என்பதும் , முதலாம் தெசொலேனிக்கேயர் சந்திப்புக்குப் பிறகு இரண்டாம் தெசொலேனிக்கேயர் சந்திப்பு வருவதற்குள் அவர்கள் ஒன்றாம் மற்றும் இரண்டாம் தீமோத்தேயு சகோதரர்களை சந்திக்கும்படி அறிவுறுத்தப் பட்டார்கள். அவர்களோ தீத்துவின் வீட்டிற்கு , அவர்களின் தம்பி பிலமோனுக்கு எபிரேயர் மொழியை எழுதவும் , படிக்கவும் கற்பிக்கப் போயிருந்தனர்.
இதனைக் கேள்விப்பட்ட யாக்கோபு , இரண்டுமுறை பேதுருவிடம் விளக்கும்படி கேட்டுக் கொண்ட காரியம் , மூன்று யோவான்களும் யூதாவிடம் தங்கள் பயணத்தில் வெளிப்படுத்தின விசேஷத்தைப் பகிர்ந்து கொண்டார் என்பதுவே.
நீங்கள் மாத்திரம் தனியாக ரசிக்காமல் உங்கள் சக கிறிஸ்தவ நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள் .
#JJ M>>
[10:53 AM, 9/3/2018] +91 93603 07643: இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்!!
விண்வெளியில் வேதம்:
அறிவியலும், விஞ்ஞானமும், தொழில்நுட்பமும், வானளாவிய வளர்ச்சி அடைந்திருக்கும் இந்த காலகட்டத்தில் பரிசுத்த வேதாகமத்தை ஏற்றுக்கொள்ள முடியுமா எனும் கேள்வி பல இடங்களில் இன்று சவாலாக கேட்கப்படும் ஒன்று.
சந்திரனுக்கு மனிதன் இறங்கி நடந்து 50 ஆண்டுகள் ஆகிவிட்டது.
இப்போதுமா இதையெல்லாம் நம்புகிறீர்கள் என்றெல்லாம் கேலிப்பேச்சுகள் ஒருபக்கம் பேசினாலும்,
முதன்முதலில் அந்த சந்திரனுக்கு சென்றவர்களே இந்த வேதத்தை முற்றிலும் நம்பியவர்கள் என்பதுதான் உண்மை.
அதுபோல விண்வெளி களத்தில் முதன் முதலில் எடுத்து செல்லப்பட்ட புத்தகமும் பரிசுத்த வேதாகமமே.
ஏதோ நானும் எழுதுகிறேன் என்று எதை வேண்டுமானாலும் எழுதிவிட முடியாதல்லவா?
பல பார்வையாளர்கள் இதை மிக நுணுக்கமாக கவனிக்கிறார்கள்.
விண்வெளியில் வேதம் பற்றி எழுத வேண்டிய அவசியத்தால் சரியான தகவல்களும் சேகரிக்க வேண்டியதால், அது சம்பந்தப்பட்ட நூல்கள், மற்றும் நபர்கள், பற்றி படிக்க நேர்ந்த போது,
மிகவும் ஆச்சர்யமாக இருந்தது.
ஆண்டவரின் அன்பை எண்ணும் போது
என்னையும் அறியாமல் கண் கலங்குகிறது.
Frank Boreman, முதன்முதலில் விண்வெளிக்கு சென்ற ஏவுகணை அப்பல்லோ-8ன் பைலட். (அப்ப்பா எவ்வளவு பெரிய விசுவாச வீரர்!! இவரை பற்றி அறிய தேவன் கொடுத்த தருணத்திற்காக அவருக்கு நன்றி.
அவர் படத்தை முதல் கமென்ட்டில் பதிவு செய்திருக்கிறேன்.)
Frank Boreman, Jim Lovvell, William Anders என்ற விண்வெளி வீரர்களால் அப்பல்லோ-8 என்ற விண்வெளி களத்தில் பரிசுத்த வேதாகமம் மைக்ரோபிலிமாக எடுத்து செல்லப்பட்டது.
1968ம் ஆண்டின் கிறிஸ்துமஸ் இரவு (24/12/1968) அன்று விண்வெளியிலிருந்து அப்பல்லோ-8 ன் விண்வெளி வீரர்கள் கொடுத்த பேட்டியில் அவர்கள் வாசித்த வார்த்தைகள் ஆதியாகமம்-1:1-10 "ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்" எனும் வேதத்தின் ஆரம்ப வார்த்தைகளே. அதோடு:
இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறோம்.
இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் பிறந்திருக்கிறார்.
நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்;
கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.
எனும் லூக்கா, மற்றும் ஏசாயா வின் வசனங்களை வாசித்து கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.
அதற்கு பின் இதுவரை எந்த மதப்புத்தகங்களோ, கொள்கை புத்தகங்களோ நிலவுக்கு எடுத்துச்செல்லப்படவில்லை.
இவ்விதமாக வான்வெளியிலிருந்து வாசிக்கப்பட்ட புத்தகத்தின் வார்த்தைகள் பரிசுத்த வேதாகமத்தின் வார்த்தைகள் மாத்திரமே.
அதேபோல் அவர்கள் பூமிக்கு திரும்பிய போது, பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில், Frank Boreman னிடம் உங்கள் வாழ்வின் சாதனையாக எதை கருதுகிறீர்கள்,
அல்லது எந்த நாட்களை உங்கள் வாழ்வின் பாக்கியமாக கருதுகிறீர்கள் என்று கேட்ட போது அவர் சொன்ன பதில்:
நான் பாவத்திலிருந்து விடுதலை அடைந்து இரட்சிக்கப்பட்டிருக்கிறேன் என்பதையே என் வாழ்வின் மிகப்பெரிய பொக்கிஷமாகவும், இயேசு என் பாவங்களை மன்னித்து அவர் ரத்தத்தினால் என்னை நீதிமானாக்கிய நிமிடங்களையே என் வாழ்வின் பாக்கியமான நேரமாகவும் கருதுகிறேன் என்றும்,
இதில் என் சாதனை என்பது ஒன்றுமில்லை.
நான் எதையும் சாதித்துவிடவில்லை.
ஆனால்,
"என்னை பெலப்படுத்தும் கிறிஸ்துவினால் எல்லாவற்றையும் செய்ய எனக்கு பெலன் உண்டு" என்று சொல்லியிருக்கிறார்.
மற்றவர்களும் அதை ஆமோதித்திருக்கிறார்கள்.
நான் விண்வெளி யிலிருந்த போது மிகவும் அதிகமாக உணர்ந்தது இதைதான் என்று சொல்லி
"Amazing Grace How sweet the sound
That saved a wretch like me;
I once was lost but now I'm found
Was blind but now I see"
பாடியிருக்கிறார்.
நான் சொல்வது கற்பனை அல்ல, சரித்திரம்.
--------தொடரும்--------
(விருப்பமுள்ளவர்கள் ஒரு share செய்தால் உங்கள் நண்பர்களும் பயனடைய ஒரு வாய்ப்பாக அமையும்-நன்றி)
0 comments:
Post a Comment