“உங்கள் இருதயத்தை சோதித்தறியுங்கள்!”.
இன்றைய வசனம்:நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். - (1 யோவான் 1:9).
உங்கள் தனிப்பட்ட உறவுகளில் வரும் முரண்பாடான மற்றும் மனஅழுத்த சூழ்நிலைகளில் மன்னிக்காத தன்மை என்பது பெரியபங்கு வகிக்கிறது.ஆகையால் நீங்கள் யாரையாவது மன்னிக்க வேண்டியதுள்ளதா என்பதை இப்பொழுது உங்கள் இருதயத்தில் சோதித்தறியுங்கள்.
யாரோ ஒருவர் (அவள்/அவன்)அதற்கு தகுதியுடையவரா என நீங்கள் உள்ளார்ந்த நம்பிக்கை வைத்துள்ளீர்களா? மற்றவர்களைப் பற்றி நீங்கள் எதிர்மறையாக பேசுகிறீர்களா? யாருக்கும் வெளிப்படையாக பாதிப்பு ஏற்படாவிட்டாலும் கூட நீங்கள் யாரையாவது பழிவாங்கும் எண்ணம் இருதயத்தில் கொண்டிருந்தீர்களா?மற்றவர்கள் உங்களுக்கு என்ன செய்திருக்கிறார்கள் என்பதைப் பற்றி நீங்கள் சிந்திப்பதிலேயே அதிக நேரத்தை செலவிடுகிறீர்களா?உங்களுக்குத் தீமை செய்தவருக்கு ஏதாவது நல்லது நடக்கும்போது நீங்கள் எப்படி உணருகிறீர்கள்?உங்கள் வாழ்க்கையில் எதிர்பாராத பாதகமான சூழ்நிலைக்கு காரணம் என வேறு யாரின் மீதோ பழிபோடுகிறீர்களா? நம்பிக்கைக்குரிய மனிதர்களை கண்டுபிடிப்பது மிகவும் கடினமாக உள்ளதா?நீங்கள் அடிக்கடி கோபம், மன அழுத்தம் அல்லது மனக்கசப்பை உணருகிறீர்களா? உங்கள் வாழ்க்கையில் எல்லா சூழ்நிலைகளிலும் கர்த்தருக்கு நன்றி தெரிவிப்பது கடினமாக உள்ளதா?
இவைகளில் எதாவது உங்களிடத்தில் உண்மையாகவே இருந்தால் அது உங்களுக்கு மிகப் பெரிய மனக்கசப்பை உண்டாக்கும்.கர்த்தர் நம் இருதயத்தை சோதித்தறிகிறார்.அதில் ஏதும் மன்னிக்கப்படாத தன்மை இருக்கிறதா என ஆராய்ந்து பார்க்கிறார். அப்படி இருந்தால் உடனே கர்த்தரிடம் அறிக்கையிட்டு அவர் உங்களை சுத்திகரிக்க அனுமதியுங்கள்.
ஆண்டவரே, நீர் என்னை மன்னித்தது போல நானும் பிறரை முழுஇருதயத்தோடு மன்னிக்க உதவிசெய்யும், ஆமென்.
நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. ஆமென்.
0 comments:
Post a Comment