சீறுகிறவர்களுக்கு தப்புவிக்கும் தேவன்!”.
.. நான் இப்பொழுது எழுந்து, அவன்மேல் சீறுகிறவர்களுக்கு அவனைக் காத்துச் சுகமாயிருக்கப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். - (சங்கீதம் 12:5).
நெருக்கப்படுகிறவர்களின் வேதனைகளைக் கண்டு அவர்களுக்காக தேவன் வல்லமையோடு எழும்புவது மட்டுமல்ல அவர்களை சீறுகிறவர்களின் கைக்கு தப்புவிக்கிற தேவனாயிருக்கிறார்.
எதிரிகளை தண்டித்து அவர்கள் கையிலிருந்து ஆடுகளாகிய தமது பிள்ளைகளை பிடுங்கி விடும் சர்வ வல்லமையைக் கொண்டதேவன் .. உங்களை சீறுகிறவர்களின் கைக்கு உங்களைத் தப்புவிப்பார்.
சத்துருக்கள் எவ்வளவுதான் சீறினாலும் தன் முழு பெலத்தோடு கூட கொக்கரித்து எழும்பினாலும் உங்களைப் பாதுகாக்கும் கர்த்தரின் கரத்தை அவர்களால் தட்டிவிட விட முடியாது
தாவீதை சத்துருக்கள் இப்படித்தான் சூழ்ந்து வளைத்துக் கொண்டார்கள்.
அநேகம் காளைகள் என்னைச் சூழ்ந்திருக்கிறது. பாசான் தேசத்து பலத்த எருதுகள் என்னை வளைந்தது கொண்டது. பிறீ கெர்ச்சிக்கிற சிங்கத்தைப் போல என் மேல் தங்கள் வாயை திறக்கிறார்கள் என்று கர்த்தரிடத்தில் ஜெபித்தான்.
நடந்தது என்ன?
கர்த்தர பாதுகாத்த விதத்தை தாவீது சொல்கிறார்.
என் ஆத்துமா பட்டயத்திற்கும் எனக்கு அருமையானதை நாய்களின் துஷ்டத்திற்கும் தப்புவித்தார்.என்னை சிங்கத்தின் வாயிலிருந்தும், காண்டாமிருகத்தின் கொம்புகளிலிருந்தும் செவிகொடுத்து விடுவித்தார். என்று
அவன் கர்த்தருடைய நாமத்தை சபை நடுவில் துதித்து பாடினான்.( சங் 22:11-22)
ஆம் என் அன்பு வாசகரே,
உங்களையும் தாவீதைப் போல தேவன் பாதுகாப்பார். உங்கள் மேல் சீறிப் பாய்கிற மக்களுக்கும் அந்தகார வல்லமைக்கும், பிசாசுக்கும் ,துஷ்ட மனிதருக்கும், பாழாக்கும் கொள்ளை நோய்க்கும், உங்களை பரிதவிக்க செய்யும் வறுமைக்கும் உங்களை தப்புவிப்பார்.
அவர்களும், அவைகளும் உங்கள் மேல் பெலன் கொள்ளாதிருக்கச் செய்வார்.
அவருடைய இரத்தத்தினாலே மீட்கப்பட்டவர்களாகிய உங்களுக்கு விடுதலையும் இரட்சிப்பு கர்த்தரால் வரும். கட்டாயம் உங்களை விடுவித்து காப்பார்.
உங்களை நம்பி வந்திருக்கிறேன்.
வேறு வழி எனக்கு இல்லலை ஆண்டவரே !
நீரே என் வழி என்று நீங்கள் சொல்லிவிட்டாலே போதும் .அவரை நம்புகிற ஒருவனைக் கூட இதுவரை அவர் கைவிட்டதே இல்லை.
அவர் மீது நம்பிக்கையாய் இருக்கும் உங்களை துன்மார்க்கர் கைக்குத் தப்புவிக்காமல் விடவே மாட்டார்.
துன்மார்க்கரின் கொம்பு வெட்டிப் போடப்படும் நீதிமான்களாகிய உங்கள் கொம்பு உயர்த்தப்படும் (சங் 97:10)
தம் பரிசுத்தவான்களின் ஆத்துமாக்களை காப்பாற்றி துன்மார்க்கரின் கைக்கு தப்புவிக்கிற தேவன் நம்முடைய தேவன்.
(சங் 97:10)
எனவே மனங்கலங்காதீர்கள்.
யார் சீறீ பாய்தாலென்ன. உங்களை காக்கும் கர்த்தரை மீறி எதுவுமே யாராலும் செய்ய முடியாது.
அமைதியாய் தேவன்உங்களுக்காக ஆயத்தப்படுத்தி வைத்திருக்கும் ஆசீர்வாதங்களை விசுவாசியுங்கள். அதைக் குறித்து பேசுங்கள், பாடுங்கள்.
உங்கள் வார்த்தைகள் உருவாக்கும் , சிருஷ்டிக்கும் வல்லமையுள்ள பெரிய ஆயுதமாயிருக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்களனால் விசுவாசமாய் தான் நினைப்பீர்கள் ! சிந்திப்பீர்கள்! யோசிப்பீர்கள். பேசுவீர்கள் ! ஜெபியுங்கள் !!
பரிசுத்தஆவியின் பலத்தினாலே உங்களுக்கு நம்பிக்கை பெருகும்படிக்கு, நம்பிக்கையின் தேவன் விசுவாசத்தினால் உண்டாகும் எல்லாவித சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் உங்களை நிரப்புவாராக.
(ரோமர் 15:13).
அந்த விசுவாசம் உங்கள் வாழ்வில் சந்தோஷத்தையும், சமாதானத்தையும் உங்கள் இருதயத்தில் நிரப்பி விடும்.
நீங்கள் சந்தோஷமாய் ...
காப்பார் என்னை காப்பார் ..
காத்தவர் காப்பார் இன்னும்
இனிமேலும் காத்திடுவார். .
கலங்காதே மனமே ! காத்திடுவார்.
என்று உங்கள் மனம் துள்ளிக் குதிக்கும்..
கர்த்தர் உங்களை தமது வைராக்கியத்தின்படி உங்களை காத்து் உங்களை தப்புவிப்பார்.
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!!
0 comments:
Post a Comment