Top Social Icons

பாவ மன்னிப்பாகிய இரட்சிப்பு

இரட்சிப்பு என்றால் என்னவென்பதை கடந்த நாட்களில் தியானித்தோம் இன்று பாவமன்னிப்பாகிய இரட்சிப்பை குறித்து தியானிப்போம்.

இயேசுவிடம் வரும் எந்த மனிதனும் அடையும் முதல் அனுபவம் பாவ உணர்வடைந்து பாவமன்னிப்பின் நிச்சயத்தை பெற்றுக்கொள்ளுதலாகும்.

இதுவே ஒரு மனிதனுடைய வளர்ச்சிக்கும் அவனது எதிர்கால ஆசீர்வாதத்திற்கும் அஸ்திபாரமாக காணப்படுகிறது. இல்லாவிட்டால் அவன் குற்ற மனசாட்சியுடன் வாழ்வான்.
அவனால் எந்த விஷயத்திலும் முன்னேற முடியாது..

மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது, நான் அதை உங்களுக்குப் பலிபீடத்தின்மேல் உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படிக்குக் கட்டளையிட்டேன், ஆத்துமாவிற்காகப் பாவநிவிர்த்தி செய்கிறது இரத்தமே (லேவி 17:11)

இயேசு கிறிஸ்துவின் இரத்தமே ஒரு மனிதனின் பாவத்தை மன்னித்து  நிவிர்த்தி செய்கிறது.

அவரே தன்னுடைய சொந்த இரத்தத்தை சிந்தும்படியாக இவ்வுலகத்தில் வந்தார்.

வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார். 
- (எபிரேயர் 9:12).

அந்தப்படி  இயேசுவை ஏற்றுக்கொள்கிற ஒரு மனிதன் இயேசு தனக்காக சிலுவையில் அடிக்கப்பட்டதையும் இரத்தம் சிந்தி மாித்ததையும் விசுவாசித்து  உண்மையான மனஸ்தாபத்துடன் தான் ஒரு பாவி என்று பாவ உணர்வடைகிறான்.

பாவத்தின் வஞ்சனையால் கடினப்பட்டிருந்த அவன் இதயம் பாவம் உணர்வுள்ள இருதயமாக மாற்றப்பட்டு பாவத்தை அறிக்கை செய்து பாவ மன்னிப்பை பெற்றுக் கொள்கிறான்.

லூக் 1:77-ல் தேவன் தமது ஜனத்திற்கு பாவமன்னிப்பாகிய இரட்சிப்பை தெரியப்படுத்துகிறார்,
என்ற வசனத்தின்படி
பாவமன்னிப்பாகிய இரட்சிப்பை தேவன் கொடுக்கிறார் .

இதுவே இரட்சிப்பின் ஆரம்ப நிலை ஆகும்.

பாவமன்னிப்பாகிய இரட்சிப்பை எப்பொழுது பெற்றானோ அப்பொழுதே இரட்சிப்பின் சந்தோஷத்தை தேவன் அவனுக்கு நிறைவாய் கொடுக்கிறார். பாவமன்னிப்பாகிய இரட்சிப்பை பெற்றுக் கொண்டவன் எத்தகைய சூழ்நிலையிலும்  தன் சந்தோஷத்தை இழந்து போக மாட்டான்.
இதுவே இரட்சிக்கப்பட்டோரின் அடையாளமாகும்.

அது மாத்திரமல்ல
ஒரு சிறு தவறு செய்யும்போது கூட அந்த சிறு தவறை உணர்த்தும்படியாக அவன் ஆவியாகிய மனசாட்சியில் ஆவியானவர்  வசிக்கிறார். 

இப்படி அவனுடைய இருதயத்தில் வாசம்பண்ணி அவனை சரியான பாதையில் நடத்துகிறார்.

உதாரணமாக,
தாவீது தேவனுடைய ஆவியானவரின் நடத்துதலில் இருந்தபோது நடந்த சம்பவம் என்னவென்றால்,

ராஜாவாகிய சவுலின் சால்வை அறுத்து எடுத்து கொள்ளக் கூடிய ஒரு சூழ்நிலை வந்தபோது கூட அவன் மனது அவனைப் வாதித்தது.

ஆவியானவரின் நடத்துதல் இல்லாமல்
பின் மாற்றத்தில் இருந்த போதோ தனது உத்தம போர்சேவகனாகிய உரியாவை சாக வைத்து அவன் மனைவியை தன் மனைவியாக அபகரித்துக் கொண்ட போது கூட அவன் மனது வாதிக்கப்படவில்லை.

உணர்வுள்ள இருதயத்தை  அவன் இழந்து போயிருந்தான். நாத்தான் தீர்க்கதரிசி வந்து  அவனுடைய பாவத்தை உணர்த்த வேண்டியதாயிருந்தது.

எனவே பாவ மன்னிப்பால் இரட்சிப்பை பெற்றவனுக்கு அவன் இருதயத்தில் உள்ள உணர்வின் மூலம் தேவன் அவனை சரியான பாதையில் நடத்துகிறார்.
அதனால் தெய்வீக சந்தோஷத்தையும் சமாதானத்தையும் இழந்து போகாமல் ஆவிக்குரியவனாகவே ஜீவிப்பான்.

என் அன்பு வாசகரே!
இரட்சிப்பின் முதல் அனுபவமாகிய பாவமன்னிப்பின் இரட்சிப்பை இதுவரை பெற்றுக்கொள்ளாமல் இருப்பீர்களானால், பெற்றுக்கொண்டு இரட்சிப்பின் சந்தோஷத்தை உங்கள் வாழ்வில் அனுபவமாய் கொள்ளுங்கள்.

நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். 
SHARE

Milan Tomic

Hi. I’m Designer of Blog Magic. I’m CEO/Founder of ThemeXpose. I’m Creative Art Director, Web Designer, UI/UX Designer, Interaction Designer, Industrial Designer, Web Developer, Business Enthusiast, StartUp Enthusiast, Speaker, Writer and Photographer. Inspired to make things looks better.

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

உங்கள் நாமம் பரலோகில் எழுதப்பட்டுள்ளது

“உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள்.” • (லூக்கா 10:20). பிரியமானவர்களே, ஆவிகள் உங்களுக்குக் கீழ்...