கள்ள உபதேசத்தை எப்படி கண்டறிவது?
ரூபாய் நோட்டுகளை எண்ணும் மிஷின் வருவதற்கு முன்பு காசளர்களுக்கு கள்ள ௹பாய் தாள்களை இனம் கண்டுகொள்ள உண்மையான ரூபாய் தாள்களை கையில் கொடுத்து எண்ணுகின்ற பயிற்சி பலமுறை தரப்பட்டதாம்.; நல்ல ரூபாய் தாள்களில் நன்றாக பழகிய பிற்பாடு;நல்ல ரூபாய் தாள்களோடு கள்ளரூபாய் தாள்கள் சில வைக்கப்பட்டு எண்ணுவதற்கு கொடுப்பார்களாம்; எற்கனவே உண்மையான ௹பாய் தாள்களில் எண்ணி பழகினவர்கள்; கள்ளரூபாய் தாள்களை சுலபமாக கண்டுபிடித்து விடுவார்களாம். நல்ல ரூபாய் தாள்களை எண்ணி, எண்ணி அவர்களது கைகள் பழகிவிட்டதால் கள்ள௹பாய் தாள்களை அவர்களால் சுலபமாக கண்டுபிடித்து விட முடியும்.
அதுபோலவே கள்ள உபதேசங்களை கண்டறிய என்ன செய்வது? அதற்க்கான சுலபமான வழி நல்ல அல்லது உண்மையான உபதேசங்களோடு நமக்கு நல்ல பழக்கம் இருக்கவேண்டும்;நல்ல உபதேசங்களை நன்கு அறிந்திருந்தால் மட்டுமே கள்ள உபதேசங்களை கண்டுபிடிக்கமுடியும்.அதற்கு நம்மை விலக்கி காத்துகொள்ளமுடியும்.
அப்போஸ்தலர்கள் கிறிஸ்துவை நன்கு அறிந்திருந்தார்கள்; அவரோடு நல்ல ஐக்கியம் இருந்தது; இதினால் அப்போஸ்தலர்கள் கள்ள கிறிஸ்துகளைக் குறித்து ஆதி திருச்சபைகளுக்கு அடையாளம் காட்டினார்கள்.
கள்ள உபதேசங்களுக்கு தப்ப உண்மையான, ஆரோக்கியமான உபதேசங்களை உடைய பரிசுத்த வேதத்தை நாம் ஆழமாக படித்து, அறிய வேண்டியது மிகவும் அவசியமாகும்.
கள்ள உபதேசங்களுக்கு தப்பி பிழைக்க நமக்கு "பரிசுத்த வேதமே வெளிச்சம் ". ⚛
0 comments:
Post a Comment