கடிவாளத்தால் அடக்குவது
சங் 39:1
என் நாவினால் பாவம் செய்யாதபடிக்கு நான் என் வழிகளைக் காத்து, துன்மார்க்கன் எனக்கு முன்பாக இருக்கும் மட்டும் வாயை கடிவாளத்தால் அடக்கிவைப்பேன் என்றேன்.
நாவினால் நாம் பாவஞ்செய்து தேவனை மறுதலிக்க வேண்டும் அவருக்கு விரோதமாக பேச வேண்டும் என்பது பிசாசின் திட்டம். இதற்காக மனிதனை சோதிக்க அவன் அருகில் நிற்பான். சில நேரங்களில் மனிதர்கள் வடிவிலும் நிற்பான். அந்த நேரங்களில் வாயை கடிவாளத்தினால் அடக்குவதினால் மிக எளிதாக ஜெயமெடுக்கலாம்.
கடிவாளத்தால் அடக்குவது என்பது மவுனமாகி, ஊமையாக இருந்து நலமானதையும் பேசாமல் இருப்பதுதான்.
மற்ற மனிதர்களால், உறவினர்களால், நண்பர்களால் பிரச்சனை போராட்டம் என்று வந்தால் உடனே நாவினால் நலமானதையும் பேசாமல் பொறுமையாக அமர்ந்திருங்கள் எளிதாக ஜெயமெடுப்பீர்கள்.
0 comments:
Post a Comment