கர்த்தர் நம்மைப் பிரகாசிப்பிக்கிற தேவனாயிருக்கிறார்; பண்டிகைப் பலியைக் கொண்டுபோய் பலிபீடத்தின் கொம்புகளில் கயிறுகளால் கட்டுங்கள்.
• (சங்கீதம் 118:27).
எப்போதும் வெளிச்சம் வீசிட, தப்பேதுமின்றி தேவனோடு இணைந்திருங்கள்!
அனேகருக்குப் பிரச்சனை என்னவெனில், எப்போதும் ஆவிக்குரிய வாழ்வில், பிரகாசிக்க முடியவில்லை! ஏதாவது ஒரு சூழ்நிலையில் சோர்வாகிவிடுகிறது! ஏதாவது ஒன்றில் தோல்வியாகி விடுகிறது! - இப்படி ஏதாவது இருக்கும்!
வெளிச்சம் தரக்கூடிய மின் விளக்குகள், மின்சார இணைப்பிலிருந்து துண்டிக்கப்படும்போது வெளிச்சம் தர முடியாது. மின்சாரத்தோடு இணைப்பில் சரியாக இருந்தால் வெளிச்சம் தருவது சரியாக இருக்கும்! வார்த்தையாகிய தேவனோடு எப்போதும் இணைப்பில் இருந்துபாருங்கள்! இருள்நீக்கும் வெளிச்சமாய் நாம் இருக்கவும், வெளிச்சத்தில் நாம் நடக்கவும் ஒரு பிரச்சனையும் இராது!
சிந்திக்க : 👌🛫🙇🏻♂
தேவ இணைப்பைத் தடை செய்யும் பாவ இணைப்புக்களை கிருபையால் அழிக்கலாம்! வெளிச்சம் வீசலாம் வாருங்கள்! ஆமென்.
0 comments:
Post a Comment