தீர்க்கதரிசி/ தீர்க்கதரிசினி என்பவர் ஒரு நபர் தேவனால் அழைக்கப்பட்டவர்.
ஒரு தீர்க்கதரிசி (ஆணோ பெண்ணோ)
அவன் அனுப்பியவரின் ஒலிப்பெட்டியாயிருக்கிறான். (Speaker).
தீர்க்கதரிசி அனுப்பியவரின் பட்சத்திலிருந்து பேசுகிறான், மோசேயைப்போல். தேவன் சொல்லுவதை சொல்லுபவன். மிகாயா தேவன் சொல்லுவதையே சொல்லுவேன் என்றார்.
யாத்திராகமம் 7: 1- 2
கர்த்தர் மோசேயை நோக்கி: பார், உன்னை நான் பார்வோனுக்கு தேவனாக்கினேன்; உன் சகோதரனாகிய ஆரோன் உன் தீர்க்கதரிசியாயிருப்பான்.
நான் உனக்குக் கட்டளையிடும் யாவையும் நீ சொல்லவேண்டும்: பார்வோன் இஸ்ரவேல் புத்திரரைத் தன் தேசத்திலிருந்து அனுப்பிவிடும்படி உன் சகோதரனாகிய ஆரோன் அவனிடத்தில் பேசவேண்டும்.
ஒரு தீர்க்கதரிசி ஞான திருஷ்டிக்காரனாக
கருதப்படுகிறான்.
(1 சாமு 9:9) தேவனிடத்தில் விசாரிக்கப்போனால் தீர்க்கதரிசியிடத்தில் போவோம் வாருங்கள் என்பார்கள். கர்த்தர் தன் ரகசியங்களை தீர்க்கதரிசிகளிடம் சொல்லுகிறார், ஆமோஸ் 3: 7
கர்த்தராகிய ஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல்
ஒரு காரியத்தையும் செய்யார். தீர்க்கதரிசனத்தை ஆவியானவர் தன் தீர்க்கதரிசி மூலம் வெளிப்படுத்துகிறார்.
2 பேதுரு 1:21
தீர்க்கதரிசனமானது ஒருகாலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை; தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள்.
எல்லாம் கர்த்தரால் கட்டளையிடப்பட்டவைகள்.
நாம் புகழ் அடையும்படிக்கோ எதிர்பார்த்திருக்கிறது நடக்கிறது என்றோ நாம் நினைக்கக்கூடாது. இப்படிப்பட்ட எதிர்பார்ப்புகளோடு நாம் செயல்பட்டால் பல எதிர்ப்புகளை பிசாசின் வடிவிலே காண வேண்டியதாயிருக்கும். அதனாலேயே தீர்க்கதரிசி தேவனோடு நெருங்கிய ஐக்கியம் உடையவனாயிருப்பான். தன் சுயத்தை சிலுவயிலே அறைந்திருப்பான். தேவ சந்நிதியிலே தேவனை நோக்கியே அவருடைய வார்த்தைக்கு காத்திருப்பான். ஒவ்வொரு செயலையும் அவரிடமே கேட்டுச்செய்வான். மற்றவர்களைப்பற்றி கோள் சொல்லாதவர்கள் பொய் பேச மாட்டார்கள். தீர்க்கதரிசிகள் அந்த வகையினரே. இதில் கூறப்பட்டவைகளுக்கு எதிரானவர்கள் கள்ளத்தீர்க்கதரிசிகள்.
மாரநாதா!
0 comments:
Post a Comment