கர்ப்பத்தின் கனியை தரும் உடன்படிக்கை
யோபு 31:1
என் கண்களோடே உடன்படிக்கைபண்ணின நான் ஒரு கன்னிகையின்மேல் நினைப்பாயிருப்பதெப்படி?
அப்பொழுது உன்னதங்களிலிருந்து தேவன் அளிக்கும் பங்கும், உன்னதத்திலிருந்து சர்வவல்லவர் கொடுக்கும் சுதந்தரமும் கிடைக்குமோ?
பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன் என்று வேதம் கூறுகின்றது.(சங் 127:4) கண்களினால் ஒரு கன்னிகையின் மீது(எதிர்பாலினர்) நினைப்பாக இருக்கும் போது, சர்வ வல்லவர் கொடுக்கும் கர்ப்பத்தின் கனி என்ற சுதந்தரம் கிடைக்காது.
இதை அறிந்த யோபு தன் கண்களால் எந்த கன்னிகையும் இச்சையோடு பார்க்க மாட்டேன் என்று கண்களோடு உடன்படிக்கை பண்ணியிருந்தான். முதலில் 10 பிள்ளைகளும், அவர்கள் மரித்த பின்பு மீண்டும் பத்து குழந்தைகளும் கொடுத்து தேவாதி தேவன் அவனை ஆசீர்வதித்தார்.
ஒருவேளை நீங்கள் கர்ப்பத்தின் கனிக்காக நீண்ட நெடிய நாட்களாக ஜெபிக்கலாம். எதிர்பாலினரை இச்சையோடு பார்க்கமாட்டேன் என்று உங்கள் கண்களோடு உடன்படிக்கை பண்ணுங்கள். தேவாதி தேவன் சர்வ வல்லமையுள்ளவர் அடைக்கப்பட்ட கர்ப்பத்தினை திறப்பார். சீக்கிரத்தில் குழந்தை பாக்கியத்தினை பெறுவீர்கள்.
ஜெபம்:
அன்பின் பரலோக பிதாவே என் கண்களைக் பரிசுத்தமாக பாதுகாத்துக் கொள்ள, என் கண்களோடு உடன்படிக்கை பண்ணுகின்றேன் என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே என்னை அர்ப்பணிக்கின்றேன். ஆமென்.
0 comments:
Post a Comment