Top Social Icons

இச்சையினால் வரும் ”டைவர்ஸ்”

இச்சையினால் வரும் ”டைவர்ஸ்”

யோபு 31:1
     என் கண்களோடே உடன்படிக்கைபண்ணின நான் ஒரு கன்னிகையின்மேல் நினைப்பாயிருப்பதெப்படி?
    அப்பொழுது உன்னதங்களிலிருந்து தேவன் அளிக்கும் பங்கும், உன்னதத்திலிருந்து சர்வவல்லவர் கொடுக்கும் சுதந்தரமும் கிடைக்குமோ?

     மற்ற ஸ்தீரிகளை இச்சையோடு பார்ப்பது விபச்சாரம் என்று சத்திய வேதம் கூறுகின்றது. விபச்சாரம், வேசித்தனம் செய்தால் அவர்கள் குடும்பம் உடைக்கப்படும். இதை பரலோகமும் அங்கீகரிக்கும்.(மத் 5:32)
    யோபு தன் கண்களோடு உடன்படிக்கைபண்ணி ஒரு கன்னிகையின் மீது(எதிர்பாலினர்) இச்சையாக இராதப்படிக்கு தன்னை பரிசுத்தமாக காத்துக்கொண்டான். பிசாசின் தந்திரத்தினால் பிள்ளைகளை இழந்து, மனைவி தூஷித்து  குடும்பம் உடைக்கப்பட்டாலும் தேவன் மறுபடியும் அவன் குடும்பத்தை கட்டினார். இரட்டிப்பான ஆசீர்வாதத்தினை பெற்றான்.
    உங்கள் குடும்பமும் உடைக்கப்பட்டிருக்கலாம் அல்லது உடைக்கப்படும் நிலையில் இருக்கலாம். கண்களை மட்டும் பரிசுத்தமாக இச்சைக்கும் ஆபாசத்திற்க்கும் விலக்கி பாதுகாத்துக்கொள்ளுங்கள். தேவன் உங்கள் குடும்பத்தை உடைக்காமல் பாதுகாப்பார். உடைக்கப்பட்டிருந்தாலும் மறுபடியும் அதைக்கட்டுவார்.  டைவர்ஸ்  கேஸ் (DIVORCE) சீக்கிரத்தில் முடிந்து விடும்.
 
ஜெபம்:
  அன்பின் பரலோக பிதாவே என் கண்களை இச்சைக்கும், ஆபாசத்திற்க்கும் விலக்கி பாதுகாத்துக்கொள்ளும். பரிசுத்தமாக பார்க்க கிருபைகளை தாரும். என் குடும்பத்தை கட்டும்  கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே  ஆமென்.
SHARE

Milan Tomic

Hi. I’m Designer of Blog Magic. I’m CEO/Founder of ThemeXpose. I’m Creative Art Director, Web Designer, UI/UX Designer, Interaction Designer, Industrial Designer, Web Developer, Business Enthusiast, StartUp Enthusiast, Speaker, Writer and Photographer. Inspired to make things looks better.

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

உங்கள் நாமம் பரலோகில் எழுதப்பட்டுள்ளது

“உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள்.” • (லூக்கா 10:20). பிரியமானவர்களே, ஆவிகள் உங்களுக்குக் கீழ்...