Top Social Icons

தேவன் போஷிப்பதை ஞானமாய்த் தக்கவைத்துக்கொள்ளுங்கள்!

“தேவன் போஷிப்பதை ஞானமாய்த் தக்கவைத்துக்கொள்ளுங்கள்!”.

II ராஜாக்கள் 4:2  எலிசா அவளை நோக்கி: நான் உனக்கு என்ன செய்யவேண்டும்? வீட்டில் உன்னிடத்தில் என்ன இருக்கிறது சொல் என்றான். அதற்கு அவள்: ஒரு குடம் எண்ணெய் அல்லாமல் உமது அடியாளுடைய வீட்டில் வேறொன்றும் இல்லை என்றாள்.

4:3  அப்பொழுது அவன்: நீ போய், உன்னுடைய அயல்வீட்டுக்காரர் எல்லாரிடத்திலும் அநேகம் வெறும்பாத்திரங்களைக் கேட்டுவாங்கி,

4:4  உள்ளேபோய், உன் பிள்ளைகளுடன் உள்ளே நின்று கதவைப் பூட்டி, அந்தப் பாத்திரங்கள் எல்லாவற்றிலும் வார்த்து, நிறைந்ததை ஒரு பக்கத்தில் வை என்றான்.

4:5  அவள் அவனிடத்திலிருந்துபோய், தன் பிள்ளைகளுடன் கதவைப் பூட்டிக்கொண்டு, இவர்கள் பாத்திரங்களை அவளிடத்தில் கொடுக்க, அவள் அவைகளில் வார்த்தாள்.

4:6  அந்தப் பாத்திரங்கள் நிறைந்தபின், அவள் தன் மகன் ஒருவனை நோக்கி: இன்னும் ஒரு பாத்திரம் கொண்டுவா என்றாள். அதற்கு அவன்: வேறே பாத்திரம் இல்லை என்றான்; அப்பொழுது எண்ணெய் நின்றுபோயிற்று.

4:7  அவள் போய் தேவனுடைய மனுஷனுக்கு அதை அறிவித்தாள். அப்பொழுது அவன்: நீ போய் அந்த எண்ணெயை விற்று, உன் கடனைத் தீர்த்து, மீந்ததைக்கொண்டு நீயும் உன் பிள்ளைகளும் ஜீவனம் பண்ணுங்கள் என்றான்.

வாழ்வில் “தேவை” என்பதற்கு தேவனின் வார்த்தை தரும் மிகுதியான ஞானத்தையும், ஆசீர்வாதங்களையும் முழுமையாய்ப் பெற்றுக்கொள்ளவேண்டும். அவர் தரும் அபிரிமிதமான ஆசீர்வாதங்கள் மட்டுமின்றி உங்கள் கைகளில் இருப்பதைக் கொண்டு வாழும் ஞானத்தையும் பெற்றுக்கொள்ள வேண்டும்.

2ராஜா 4:2-7ல் இவ்வாறு பார்க்கிறோம் – தீர்க்கதரிசி எலிசா ஏழை விதவையிடம் இருக்கும் காலிப்பாத்திரங்களைக் கொண்டுவரும்படி கூறினார்.  பின்பு அவள் வைத்திருந்த கடைசி எண்ணெயை எல்லாக் காலிப்பாத்திரங்களிலும் ஊற்றச்சொன்னார்.  அவர் சொன்னபடி செய்தபோது அதிசயம் நிகழ்ந்தது.  அத்தனைப் பாத்திரங்களிலிருந்தும் எண்ணெய் நிரம்பி வழிந்தது.  எலிசா அவளிடம் எண்ணெய் எல்லாவற்றையும் விற்று கடன் தீர்ந்ததுபோக மீதி பணத்தைக் கொண்டு வாழும்படி கூறினார்.

இங்கே இரண்டு காரியங்களை உங்களோடு பகிர விரும்புகிறேன்.

முதலாவதாக,  நம் தேவை நிறைவேறும்வரைத் தேவனின் போஷிப்பு நீடிக்கிறது.  உங்கள் தேவைகளுக்கு எப்போதும் இயேசுவைச் சார்ந்திருங்கள்.

இரண்டாவதாக, நீங்கள் கடன்பட்டிருந்தால் உங்கள் கடன்களைத் தீர்ப்பதில் முதல் கவனம் செலுத்துங்கள்.  “எண்ணையை விற்று உன் கடனைத் தீர்த்துக்கொள்” என்று எலிசா விதவையிடம் கூறியதை வாசித்திருப்பீர்கள். உங்கள் கடன் தீர்ந்தபிறகு கையில் இருப்பதைக்கொண்டு வாழக் கற்றுக்கொள்ளுங்கள்.

அன்பார்ந்தவர்களே, எவ்வளவு அதிகமாய் நீங்கள் தேவ வார்த்தையைத் தியானித்துப் பிரயோஜனப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறீர்களோ, அவ்வளவு அதிகமாய்த் தேவன் உங்களைத் திருப்தியாக்குவார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக.  ஆமென்!

SHARE

Milan Tomic

Hi. I’m Designer of Blog Magic. I’m CEO/Founder of ThemeXpose. I’m Creative Art Director, Web Designer, UI/UX Designer, Interaction Designer, Industrial Designer, Web Developer, Business Enthusiast, StartUp Enthusiast, Speaker, Writer and Photographer. Inspired to make things looks better.

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

உங்கள் நாமம் பரலோகில் எழுதப்பட்டுள்ளது

“உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள்.” • (லூக்கா 10:20). பிரியமானவர்களே, ஆவிகள் உங்களுக்குக் கீழ்...