தேவன் சபிக்காதவனை நான் சபிப்பதெப்படி? கர்த்தர் வெறுக்காதவனை நான் வெறுப்பதெப்படி?
• (எண்ணாகமம் 23:8).
ஒரு தகப்பன் தான் நேசிக்கின்ற பிள்ளையை சபிப்பதில்லை.
சில வேளைகளிலே இந்த உலகத்தின் தகப்பன்மார் தவறலாம் அல்லது நன்மையை நிறைவேற்ற முடியாத நிலைகள் ஏற்படலாம்.
ஆனால் எங்கள் தேவன் ஒருபோதும் தவறுவதில்லை.
அவர் தம்முடைய பிள் ளைகளை சபிப்பவர் அல்ல.
ஆனால் நாங்கள் பெருமை கொண்டு, கீழ்ப்படியாமல், துணிகரமாக, பாவங்க ளின் வாழ்ந்து கொண்;டு இருப்போம் என்றால்,..
நாங்கள் எங்களை, எங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஆளுகையை விட்டு பிசாசானவனு டைய ஆளுகைக்குள் ஒப்புக் கொடுக்கின்றவர்களாக இருபபோம்.
பிசாசான வன் கொல்லவும் அழிக்கவுமே அன்றி வேறொன்றுக்கும் வரான்.
பல நாடுகளில், நாட்டை ஆளும் அரசா ங்கம், ஒரு மனிதன் மேல் பாரிய குற்றச்சாட்டு சுமத்தப்படும்போது, அவனை உடனடியாக கடும் தண்டனைக்கு ஒப்புக் கொடுக்காமல்,
அத்தகைய வழக்குகளை நன்கு அலசி ஆராய்கின்றார்கள்.
அத்த கைய ஆளுகையிலும் குறைவுகள் உண்டு.
ஆனால்
எங்கள் கர்த்தரா கிய இயேசுவின் ஆளுகை அதி உன்னதமானது.
அன்பினாலே யாவரையும் அழைக்கின்றார்.
கர்த்தருடைய ஜனங்களை சபிக்கும்படி பாலாக் என்னும் ராஜா பிலயாம் என்னும் ஒருவனை அனுப்பினான்.
அவன் சபிக்க சென்றபோது, கர்த்தர் அவனுடன் பேசினார்.
பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல மனம்மாற அவர் ஒரு மனுபு த்திரனும் அல்ல அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரோ? அவர் வச னித்தும் நிறைவேற்றாதிருப்பாரோ?
இதோ, ஆசீர்வதிக்கக் கட்டளை பெற்றேன்; அவர் ஆசீர்வதிக்கிறார், அதை நான் திருப்பக் கூடாது.
என்று அந்த ஜனங்களை, அவன் ஆசீர்வதித்தான்.
இயேசு உள்ள இதயத்திலே பாவம் குடி கொள்ளாது.
அடைக்கலான் குருவி அலைந்துபோவது
போலும், தகைவிலான் குருவி பறந்துபோவதுபோலும், காரணமில்லாமல் இட்ட சாபம் தங்காது.
• (நீதிமொழிகள் 26:2).
இயேசு வாசம் செய்யயும் இடத்தில், சாபத்திற்கு இடமில்லை.
0 comments:
Post a Comment