Top Social Icons

போதனையில் உவமைகள்



இவைகளையெல்லாம் இயேசு ஜனங்களோடே உவமைகளாகப் பேசினார், உவமைகளினாலேயன்றி, அவர்களோடே பேசவில்லை.என் வாயை உவமைகளினால் திறப்பேன், உலகத்தோற்றமுதல் மறைபொருளானவைகளை வெளிப்படுத்துவேன் என்று தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது. - (மத்தேயு13:34,35).

மத்தேயு சுவிசேஷத்தில் உள்ள மலைப் பிரசங்கத்திலும், லூக்கா சுவிசேஷத்தில் உள்ள சமபூமி  பிரசங்கத்திலும் சீஷர்கள் நோக்கியே பிரசங்கம் செய்ததாகக் காண்கிறோம்.

• (மத்தேயு 5:1-2).

அவர் திரளான ஜனங்களைக் கண்டு மலையின் மேல் ஏறினார்; அவர் உட்கார்ந்தபொழுது, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்தார்கள். அப்பொழுது அவர் தமது வாயைத் திறந்து அவர்களுக்கு உபதேசித்துச் சொன்னது என்னவென்றால்

லூக்கா 6:20 அப்பொழுது அவர் தம்முடைய சீஷர்களை நோக்கிப்பார்த்தும்
மக்களிடம் பேசும் போதோ உவமைகள் பலவால் போதகம் செய்தார் என்பதைக் காண்கிறோம்.

தேவ குமாரன் உவமைகளால் ஏன் போதிக்க வேண்டும்?

இப்போது உள்ள சுவிசேஷம் அறிவிப்பவர்கள் போலே நேரடியாக பேசியிருக்கலாமே! என்னை விசுவாசியுங்கள், விசுவாசித்தால் நித்திய ஜீவனை அடைவீர்கள் என்று ஆலயத்திலும், பண்டிகையிலும் மட்டும் பேச வேண்டியது ஏன்?

மாம்சத்தில் உள்ள மக்கள் ஏதோ ஒரு தேவைக்காகவே தேவனிடத்தில் வருவது வழக்கம். சபை கூடி வருதல் என்பதை நியாயப்பிரமாணமாக செய்தார்களேயன்றி தேவனையும் அவர் ராஜ்யத்தையும் தேட வேண்டும் என்று அவர்கள் வராதது உண்மை.

உவமைகளில் பேசிய போது சீஷர்கள் கேட்கின்றனர், "ஏன் உவமைகளால் பேசுகிறீர்?" இயேசு தரும் பதிலை காணுங்கள்.

"தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியத்தை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது. புறம்பே இருக்கிறவர்களுக்கோ இவைகளெல்லாம் உவமைகளாகச் சொல்லப்படுகிறது.

ஆக எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும் என்ற கோட்பாடு இயேசுவின் போதனையில் இல்லை. அவனவனுக்கு என்ன அருளப்படவேண்டும் என்று தேவன் முன்குறித்திருக்கிறாரோ அதுவே அருளப்படும்.

விதைப்பான் உவமையில் விதையில் வேறுபாடில்லை. விதைத்த மனுஷகுமாரனும் விதை கெட்டுப்போக வேண்டும் என்று கல்லிலோ முட்களிலோ போடுவதில்லை, அவனவன் கேட்டு உள்வாங்கி பயன் பெறும் வகையில் தான் வேறுபாடு. நல்ல மண்ணான விசுவாசிகளும் ஒன்று முப்பதும், ஒன்று அறுபதும், ஒன்று நூறுமாகப் பலன்கொடுக்கிறார்கள்
இதைத் தான் பவுல் 1 கொரிந்தியர் 3:10-13ல் கூறுகிறார்.

சிந்திக்க : 💫🎺📖

எனக்கு அளிக்கப்பட்ட தேவகிருபையின்படியே புத்தியுள்ள சிற்பாசாரியைப்போல அஸ்திபாரம்போட்டேன். வேறொருவன் அதின்மேல் கட்டுகிறான். அவனவன் தான் அதின்மேல் இன்னவிதமாய்க் கட்டுகிறானென்று பார்க்கக்கடவன். போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசுகிறிஸ்துவை அல்லாமல் வேறே அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது. ஒருவன் அந்த அஸ்திபாரத்தின்மேல் பொன், வெள்ளி, விலையேறப்பெற்ற கல், மரம், புல், வைக்கோல் ஆகிய இவைகளைக் கட்டினால், அவனவனுடைய வேலைப்பாடு வெளியாகும்; நாளானது அதை விளங்கப்பண்ணும். ஏனெனில் அது அக்கினியினாலே வெளிப்படுத்தப்படும்; அவனவனுடைய வேலைப்பாடு எத்தன்மையுள்ளதென்று அக்கினியானது பரிசோதிக்கும். ஆமென்.
SHARE

Milan Tomic

Hi. I’m Designer of Blog Magic. I’m CEO/Founder of ThemeXpose. I’m Creative Art Director, Web Designer, UI/UX Designer, Interaction Designer, Industrial Designer, Web Developer, Business Enthusiast, StartUp Enthusiast, Speaker, Writer and Photographer. Inspired to make things looks better.

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

உங்கள் நாமம் பரலோகில் எழுதப்பட்டுள்ளது

“உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள்.” • (லூக்கா 10:20). பிரியமானவர்களே, ஆவிகள் உங்களுக்குக் கீழ்...