ஆதி 26:22
பின்பு அவ்விடம்விட்டுப் பெயர்ந்துபோய், வேறொரு துரவை வெட்டினான்; அதைக்குறித்து அவர்கள் வாக்குவாதம்பண்ணவில்லை; அப்பொழுது அவன்: நாம் தேசத்தில் பலுகும்படிக்கு, இப்பொழுது கர்த்தர் நமக்கு இடம் உண்டாக்கினார் என்று சொல்லி, அதற்கு ரெகொபோத் என்று பேரிட்டான்.
ஈசாக்கு துரவுகளை வெட்டினான் கேராரூர் மேய்ப்பர்கள் இது தங்களுடையது என்று வாக்குவாதம் பண்ணினார்கள். எனவே அவைகளை விட்டுக்கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்ப்பட்டான் இரண்டு துரவுகளையும் விட்டுக்கொடுத்தான். கடைசியாக துரவை வெட்டினான் அதைக்குறித்து யாரும் வாக்குவாதம் பண்ணவில்லை. எனவே தேசத்தில் பலுகிபெருகும்படிக்கு இடம் உண்டாக்கினார். என்று சொல்லி ரெகொபோத் என்று பேரிட்டான்.
எந்த காரியத்தில் யாராவது வாக்குவாதம் பண்ணினால் அதில் தேவனுடைய ஆசீர்வாதம் இல்லை. எப்பொழுது வாக்குவாதம் இல்லையோ அப்பொழுது பலுகிபெருக இடம் உண்டாகும். அதுதான் ஆசீர்வாதத்தின் அறிகுறி.
எனவே வீனான வாக்குவாதங்களுக்கு மிகவும் எச்சரிக்கையாக இருப்போமாக.
விவாதம் எழும்புமுன் அதை விட்டுவிடு ( நீதி 17:14)
ஜெபம்:
அன்பின் பரலோக பிதாவே என்னை வீனான விவாதங்களுக்கும், வாக்குவாதங்களுக்கும் விலக்கி என்னை பாதுகாத்து கொள்ளும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே ஆமென்.
0 comments:
Post a Comment