பரிசுத்த வேலி
யோபு 31:1என் கண்களோடே உடன்படிக்கைபண்ணின நான் ஒரு கன்னிகையின்மேல் நினைப்பாயிருப்பதெப்படி?
அப்பொழுது உன்னதங்களிலிருந்து தேவன் அளிக்கும் பங்கும், உன்னதத்திலிருந்து சர்வவல்லவர் கொடுக்கும் சுதந்தரமும் கிடைக்குமோ?
சர்வ வல்ல தேவன் யோபுவையும், அவன் வீட்டையும், அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சுற்றி வேலியடைத்திருந்தார். பிசாசினால் தேவனுடைய அனுமதி இல்லாமல் அவனை தொடமுடியவில்லை. தேவன் அவனை சுற்றி ஏன் வேலியடைத்தார்? காரணம் என்ன?
யோபு முதலாவது தன்னுடைய கண்களால் எந்த கன்னிகையும் இச்சையோடு பார்க்க கூடாதப்படிக்கு வேலியடைத்திருந்தான். தேவாதி தேவனோ அவனையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சுற்றி வேலியடைத்தார்.
சிலருடைய வாழ்வில் பிசாசின் உட்புகுதல்(மாந்திரீகம், பில்லிசூன்யம்) அதிகமாக இருக்கும். பிசாசின் போராட்டமும் அதிகமாக இருக்கும். அதற்கு காரணம் கண்களை சுற்றி வேலியடைக்காமல் ”கண்டோரையும்” இச்சையோடு பார்ப்பதுதான். அப்படிப்பட்டவர்கள் முதலில் கண்களை சுற்றி பரிசுத்த வேலியடைக்க தீர்மானம் எடுங்கள். தேவாதி தேவன் உங்களையும், உங்களுக்கு உண்டான எல்லாவற்றையும் சுற்றி வேலியடைப்பார். பின்பு பிசாசின் போராட்டம் இருக்காது. பில்லி சூன்யமும் இருக்காது.
ஜெபம்:
அன்பின் பரலோக பிதாவே என் கண்களைக் பரிசுத்தமாக பாதுகாத்துக் கொள்ள கிருபைகளைத் தாரும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே ஆமென்.
0 comments:
Post a Comment