நானோவென்றால் கர்த்தரை நோக்கிக்கொண்டு, என் இரட்சிப்பின் தேவனுக்குக் காத்திருப்பேன்; என் தேவன் என்னைக் கேட்டருளுவார்.
• (மீகா 7:7).
ஆண்டவர் நீங்கள் கேட்கிறதை, உங்களுக்கு கொடுக்கிறார் என்றால், ஆயத்தமாயிருங்கள், அவர் உங்களிடம் ஏதோ பெரிய ஒன்றை எதிர்பார்க்கிறார் என்று பொருள்! அதைக் காத்திருந்து அறிந்து செயல்படுத்துங்கள்!
நீங்கள் கேட்பதை தேவன் கொடுக்கவில்லை என்றால், கவலைப்படாதிருங்கள், அவர் உங்களை அவரது சித்தத்தின்படிமட்டும் நடத்தவிரும்புகிறார் என்று பொருள். எனவே காத்திருக்கக் கற்றுக்கொள்ளுங்கள்!
இதில் ஒன்றும் உங்கள் வாழ்வில் குறைந்துபோகாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்! மாறாக, உங்கள் வாழ்வின் வழியாய் தேவநாமம் மட்டும் மகிமைப்படும்!
உலகத்தினர் நம்மை பார்க்கும் விதம் என்னவென்றால், இவர் உலக நன்மைகள் எல்லாம் பெற்றவரா என்றே பார்க்கும்! வீடு உள்ளதா?, கார் உள்ளதா?, நகை அதிகம் போட்டிருக்கிறார்களா? பிள்ளைகள் உள்ளார்களா? சமூகத்தில் (!) மதிப்பாய் வாழ்கிறவர்களா? படித்திருக்கிறார்களா? நாகரிகம் தெரிந்தவர்களா? என்றெல்லாம் பார்க்கும்!
ஆனால், ஆண்டவர் இயேசுவுக்கு தமக்குக் கீழ்ப்படிகிற பிள்ளைகளே மிக முக்கியம்! ஏனென்றால் அவர்களைக் கொண்டே தம் சித்தத்தை செய்யமுடியும்!
தேவன் எதையுமே பேசாமல் அமைதியாக இருக்கிறார் என்றால், நாமும் அமைதியாக காத்திருக்கவேண்டும்! ஏனென்றால், தேவனுடைய அமைதி கூட நம் வாழ்வில் ஆச்சரியமான விளைவுகளை ஏற்படுத்தும்!
அமைதியான தேர்வுகளை அமைதியாய் எதிர்கொள்! அதுவே ஆச்சரிய முடிவுகளைத் தரும்!
உங்கள் வாழ்வில் நீங்கள் இழந்துகொண்டே இருப்பீர்கள் என்றால், இன்னும் தைரியமாக காத்திருங்கள்! கர்த்தர் புதிய வாழ்வை உங்களுக்குத் தரப்போகிறார்! ஆமென்!
• (மீகா 7:7).
ஆண்டவர் நீங்கள் கேட்கிறதை, உங்களுக்கு கொடுக்கிறார் என்றால், ஆயத்தமாயிருங்கள், அவர் உங்களிடம் ஏதோ பெரிய ஒன்றை எதிர்பார்க்கிறார் என்று பொருள்! அதைக் காத்திருந்து அறிந்து செயல்படுத்துங்கள்!
நீங்கள் கேட்பதை தேவன் கொடுக்கவில்லை என்றால், கவலைப்படாதிருங்கள், அவர் உங்களை அவரது சித்தத்தின்படிமட்டும் நடத்தவிரும்புகிறார் என்று பொருள். எனவே காத்திருக்கக் கற்றுக்கொள்ளுங்கள்!
இதில் ஒன்றும் உங்கள் வாழ்வில் குறைந்துபோகாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்! மாறாக, உங்கள் வாழ்வின் வழியாய் தேவநாமம் மட்டும் மகிமைப்படும்!
உலகத்தினர் நம்மை பார்க்கும் விதம் என்னவென்றால், இவர் உலக நன்மைகள் எல்லாம் பெற்றவரா என்றே பார்க்கும்! வீடு உள்ளதா?, கார் உள்ளதா?, நகை அதிகம் போட்டிருக்கிறார்களா? பிள்ளைகள் உள்ளார்களா? சமூகத்தில் (!) மதிப்பாய் வாழ்கிறவர்களா? படித்திருக்கிறார்களா? நாகரிகம் தெரிந்தவர்களா? என்றெல்லாம் பார்க்கும்!
ஆனால், ஆண்டவர் இயேசுவுக்கு தமக்குக் கீழ்ப்படிகிற பிள்ளைகளே மிக முக்கியம்! ஏனென்றால் அவர்களைக் கொண்டே தம் சித்தத்தை செய்யமுடியும்!
தேவன் எதையுமே பேசாமல் அமைதியாக இருக்கிறார் என்றால், நாமும் அமைதியாக காத்திருக்கவேண்டும்! ஏனென்றால், தேவனுடைய அமைதி கூட நம் வாழ்வில் ஆச்சரியமான விளைவுகளை ஏற்படுத்தும்!
அமைதியான தேர்வுகளை அமைதியாய் எதிர்கொள்! அதுவே ஆச்சரிய முடிவுகளைத் தரும்!
உங்கள் வாழ்வில் நீங்கள் இழந்துகொண்டே இருப்பீர்கள் என்றால், இன்னும் தைரியமாக காத்திருங்கள்! கர்த்தர் புதிய வாழ்வை உங்களுக்குத் தரப்போகிறார்! ஆமென்!
0 comments:
Post a Comment