..அவன்மேல் சீறுகிறவர்களுக்கு அவனைக் காத்து சுகமாயிருக்க ப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். (சங்கீதம் 12:5).
தேவன் உங்களை பாதுகாக்கிற தேவன் மட்டுமல்ல. நீங்கள் சத்துருக்களினால் இழந்த எல்லாவற்றையும் திரும்பவும் உங்களுக்கு கொடுத்து இனி பயமில்லாமல் சுகமாய் வாழ செய்யவும் வல்லவராயிருக்கிறார்.
அவனை சுகமாயிருக்குப்பண்ணுவேன் என்று வாக்கு பண்ணியிருக்கிறார்.
(சங் 12:5)
எவ்வளவோ இழந்து விட்டேன் இனி எப்படி வாழப் போகிறேன்.
எத்தனை வருஷத்திற்கு சம்பாதித்தாலும் இழந்து போனது திரும்ப வருமா ?
என ஆயிரம் கேள்விகளோடு வாழுகிற உங்களுக்கு மனதில் சுகமில்லை. குழப்பங்களோடும் வேதனைகளோடும் வாழ்ந்து கொண்டிருக்கிற உங்களுக்கு ஓர் நற்செய்தி !!
எதையெல்லாம் இதுவரைக்கும் இழந்தீர்களோ, அதையெல்லாம் தேவன் உங்களுக்கு திரும்பக் கொடுக்கப் போகிறார்.
1⃣. ஆபிரகாமின் எதிரிகளை தொடர்ந்து போய் சகல பொருட்களையும் தன் சகோதரனாகிய லோத்தையும் அவனுடைய குடும்பத்தையும், ஜனங்களையும் திருப்பி கொண்டு வந்தது போல..
(ஆதி 14:14-16)
2⃣. தாவீது தன் மனைவிகள், பிள்ளைகள், தன் படைவீரர்களின் குடும்பங்கள், பொருள்கள், எல்லவற்றையும் திருப்பிக் கொண்டது போல.....
(I சாமு 30:1-20).
3⃣. வெட்டுக்கிளி, பச்சைக்கிளி முசுக்கட்டை பூச்சிகள், பச்சைப் புழு ஆகியவைகள் பட்சித்த வருஷங்களின் விளைவை திரும்ப தந்தது போல உங்களுக்கு. தருவேன். என்று கர்த்தர் சொல்கிறார்.
(யோவேல் 2:25)
தேவன் கிரியை செய்து இழந்தவைகளை தந்தது போல,
தேவன் உங்களுக்கும் தந்து உங்களையும் உங்கள் மனதையும் சுகமாயிருக்க பண்ணுவார்.
துன்பத்தைக் கண்ட வருஷத்திற்கும், சிறுமைப்பட்ட நாட்களுக்கும் உங்களை சரியாக மகிழ்ச்சியடைய செய்வார்
( சங் 90:15)
எனவே நீங்கள் மனம் கலங்காதீர்கள் காலங்கள் அனைத்தும் அவருடைய கரத்தில் உள்ளது. நாமும் அவருடைய கரத்தில் உள்ளோம். வருஷத்தை நன்மையால் முடிசூட்டும் தேவன் இந்த வருஷத்தில் இந்த நாள் முதல் வருகிற காலங்களைஎல்லாம் தன்மையினால் முடிசூட்டி உங்களை சுகமாயிருக்கப்பண்ணுவார்.
உங்கள் வாழ்க்கையின் துவக்கம் முதல் முடிவு மட்டும் எப்போதும் தேவனாகிய கர்த்தரின் கண்கள் உங்கள் மேலேயே இருக்கும்.
நீங்கள் காலால் தண்ணீர்பாய்ச்சி ஆசீர்வதிக்கப்படுவதல்ல.
வானத்தின் மழையினால் தண்ணீர் பாய்ப்பார். அதாவது உங்கள் கைகளினால் உங்கள் முயற்சியினால் அல்ல. இயேசு சிலுவையில் சம்பாதித்ததை இலவசமாய் தந்து உங்களை ஆசீர்வதிக்கிறார்.
இஸ்ரவேலருக்குக் கொடுத்த வாக்குத்தத்ததை சிலுவைக்கு பின்னால் யாரெல்லாம்
இயேசு கிறிஸ்துவுக்குள் இரட்சிப்பைப் பெற்றுக்கொண்டார்களோ அவர்கள் எல்லாருக்கும் அதை அப்படியே மாறாமல் தருகிறார்.
அந்த வாக்குத்தத்தங்களில் ஒன்று ..
நீ சுதந்தரிக்கப்போகிற தேசம் (வாழ்க்கை )
நீ விட்டுவந்த எகிப்து தேசத்தைப்போல் (உலக வாழ்வைப்போல்) இராது,
அங்கே நீ விதையை விதைத்து, கீரைத்தோட்டத்திற்கு நீர்பாய்ச்சுகிறதுபோல உன் காலால் நீர்ப்பாய்ச்சி வந்தாய்.
(உங்கள் கிரியைகளினால் ஆசீர்வதிக்கப்பட்டீர்கள். )
நீங்கள் சுதந்தரிக்கப்போகிற தேசமோ,(வாழ்க்கையோ)
மலைகளும் பள்ளத்தாக்குகளுமுள்ள தேசம்,(செழிப்பான வாழ்க்கை )
அது வானத்தின் மழைத் தண்ணீரைக் குடிக்கும் தேசம், உங்கள் கிரியைகளினால்ல.
இயேசு சிலுவையில் முடித்த கிரியைகளினால் ஏற்படுத்தினதை விசுவாசித்து பரிசுதாவியானவராலும் வசனத்தாலும் ஆசீர்வதிக்கப்படுகிற வாழ்க்கை)
அது உன் தேவனாகிய கர்த்தர் விசாரிக்கிற தேசம், (தேவன் உங்களை அனுதினமும் விசாரித்து நடத்தப்படும் வாழ்க்கை.)
வருஷத்தின் துவக்கமுதல் வருஷத்தின் முடிவுமட்டும் எப்பொழுதும் உன் தேவனாகிய கர்த்தரின் கண்கள் அதின்மேல் வைக்கப்பட்டிருக்கும். (உலகத்தின் முடிவு பரியந்தம் தம் கண்களை உங்கள்மேல் வைத்து உங்களை ஆசீர்வதிக்கிற தேவன்.)
உபாகமம் 11:10-12
இப்படிப்பட்ட ஆசீர்வாதங்களைக் கொடுத்து தேவன் உங்களை சுகமாயிருக்கப் பண்ணுவார்.
"சுகமாயிருக்கப்பண்ணுவார்"
1⃣. மேகம் போல சுகம் கடந்து போய் மீண்டும் யோபுவுக்கு வந்தது போல...
• (யோபு 30:15).
2⃣. ஊழியக்காரர்களை..
• (சங் 35:27).
3⃣. குடும்பத்திலுள்ள யாவரையும்.
• (சங் 122:7).
4⃣. வியாதியை நீக்கி....
• (மத் 9:12).
5⃣. பின்மாற்றத்தை நீக்கி.
• (லூக்15:27).
6⃣. எல்லாவற்றிலேயும்.
• (III யோவான் 2).
என் அன்பு வாசகரே,
உங்களை சுகமாயிருக்கப்பண்ணும் தேவன் வருகிற எல்லா நாட்களிலும் எந்தெந்த காரியத்தில் நீங்கள் சுகமாயிருக்க வேண்டுமோ அந்தந்த காரியங்களில் நீங்கள் சுகமாயிருப்பீர்கள்!!
எனவே, அவருடைய வாக்குத்தத்தத்தை பற்றிக்கொண்டு ஜீவியுங்கள். இந்த வசனங்கள் அனைத்தும் உங்கள் வாழ்வில் தேவன் நிறைவேற செய்கிற தேவனுடைய தீர்க்கதரிசன வார்த்தைகள்!!
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் !!!
0 comments:
Post a Comment