சீயோனின் மேன்மை
_________
1. தேவன் சீயோனில் வாசமாயிருக்கிறார் (சங்:9:11 ; 132:13,14)
2. தேவன் சீயோனைத் தெரிந்துகொண்டு, அது தமக்கு வாசஸ்தலமாகும்படி விரும்பினார் (சங்:132:13).
3. சீயோன் ' *பூரண வடிவுள்ளது' - இங்கிருந்துதான் தேவன் பிரகாசிக்கிறார் (சங்:50:2)
4. தேவன் சீயோனிலிருந்து அரசாளுகிறார் (சங்:146:10)
5. சீயோன் சகல மகிழ்ச்சியின் உறைவிடமாயிருக்கிறது (சங்:48:2)
6. சகல துதிகளும் சீயோனிலிருக்கும் தேவனிடத்தில் போய்ச் சேருகிறது (சங்:65:1)
7. சகல ஆசீர்வாதமும் சீயோனிலிருந்து புறப்படுகின்றன (சங்:128:5 ; 134:3)
8. சீயோனிலிருந்து வேதம் புறப்படுகிறது (ஏசாயா:2:3 ; மீகா:4:2)
9. நியாயமும் நீதியும் சீயோனிலிருந்து புறப்படுகின்றன (ஏசாயா:33:5)
10. சீயோனிலிருந்து வல்லமை புறப்படுகிறது (யோவேல்:3:16 ; மீகா:4:13 ; சங்:110:2)
0 comments:
Post a Comment