Top Social Icons

பாதுகாப்பான இரட்சிப்பின் மதில்



உன் மதில்களை இரட்சிப்பென்றும்  உன் வாதங்களைத் துதியென்றும் சொல்லுவாய்.

• (ஏசாயா 60:18).

மதில் என்பது  பாதுகாப்பான  இரட்சிப்பு இரட்சிக்கப்பட்டவா்களுக்கு தேவன் இரட்சிப்பையே பாதுகாப்பான மதிலாகவும்,  அரணுமாகவும் வைத்திருக்கிறாா். 

இரட்சிப்பையே அதற்கு  மதிலும் அரணுமாக ஏற்படுத்துவாா்.  (ஏசாயா 26:1)

சமுத்திரத்தின் தண்ணீர் மதிலாயிற்று ;

இஸ்ரவேலர் எகிப்திலிருந்து வரும்போது தேவன் சிவந்த சமுத்திரத்தின் வழியாக மோசேயைக் கொண்டு வழிநடத்தினார். மோசே வைத்திருந்த கோலால் கடல் இரண்டாக பிரிந்தது.
அதிலுள்ள தண்ணீரும் அதிலுள்ள கடல் வாழ் பிராணிகளும் ஜனங்களை பயமுறுத்தாதவாறு தண்ணீரை உயரமான, மதிலளவு அகலமான மதிலாக்க  தண்ணீரை உறைய வைத்தார்.

இஸ்ரவேல் புத்திரர் சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையிலே நடந்துபோனார்கள். அவர்கள் வலதுபுறத்திலும் அவர்கள் இடதுபுறத்திலும் ஜலம் அவர்களுக்கு மதிலாக நின்றது. 
(யாத்திராகமம்  14:22).

இஸ்ரவேலா் சமுத்திரத்தின்  நடுவில் வெட்டாந்தரையிலே நடந்து போகிறது போனார்கள். 
இரண்டு  பக்கமும் சமுத்திரத்தின்  தண்ணீர்  அவர்களுக்கு மதிலாக நின்றது.

தேவனுடைய நாசியின் சுவாசத்தினால் ஜலம் குவிந்து நின்றது. வெள்ளம் குவியலாக நிமிர்ந்து நின்றது.
ஆழமான ஜலம் நடுக்கடலிலே உறைந்துபோயிற்று.
(யாத்திராகமம் 15:8)

தேவனுடைய நாசியின் சுவாசமானது  சமுத்திரத்தின் தண்ணீரை பெரிய குவியலாக இரண்டு பக்கமும் உயரமாய் நிற்க வைத்தது. தண்ணீர் அதின் அடியிலிருந்தே  உறைந்து போய் பனிக்கட்டியாய் மாறி இரண்டு பக்கமும் மதில் போல்  நின்று விட்டது.

பனிக்கட்டியின் அடத்தி இரும்பின் அடர்த்தியை விட மிக அதிகமானது.
அதனால் தண்ணீரோ கடலில் வாழும். பிராணிகளோ  மதிலை விட்டு வெளியே வரமுடியாதளவுக்கு மிக உறுதியாக இருந்தது.

எனவே இரண்டு  பக்கமும்  உள்ள சமுத்திரத்தின்  தண்ணீர் மதிலைப் போல உறைந்து மிகப் பெரிய மதிலாய் நின்றது.  மட்டுமல்ல சமுத்திரத்தில்  உள்ள பெரிய மீன்,  கடல் வாழ் உயிரினங்கள், 
மனிதனை அழிக்க கூடிய கடல் பிராணிகள்  வெளியே வரதப்படி ஜலத்தின் மதிலானது இஸ்ரவேலரைப் பாதுகாத்தது.

இதனால் இஸ்ரவேலா் பயமின்றி  தைாியமாய்
சிவந்த சமுத்திரத்திதை  கடந்து  சென்றார்கள்.

இதைப் போலவே,
சிவந்த சமுத்திரத்திதைப் போல  சோதனையான விஷயங்களை நீங்கள் கடந்துப் போகும்போது எது உங்களை பயமுறுத்தினதோ, யார் உங்களை பயமுறுத்தினார்களோ அவைளின்,  அவர்களின் மத்தியில் தேவன் உங்களுக்கு  தந்த இரட்சிப்பு மிகப்பெரிய மதிலாயிருக்கிறது.

உங்களுக்கு ஆதரவாய் தேவன்  இயேசுவின் இரத்தத்தின் மூலம் அளித்த இரட்சிப்பு உங்களுக்கு பாதுகாப்பான மதிலாய் இருக்கிறது.

சோதனை நிமித்தம் வருகிற துன்பங்களும்,  துயரங்களும் ஆட்டைப் பிடிக்க வரும் சிங்கம், ஓநாய், கரடி  ஆகியவைகளைப் போல வருமென்றாலும்  உங்களுக்கு ஒரு சேதமும் வராதபடி நீங்கள் இயேசுவின் இரத்தத்தின் மூலம் பெற்ற இரட்சிப்பே உங்களுக்கு பாதுகாப்பான மதிலாயிருக்கும்.

எனவே தேவன் இரட்சிப்பையே மதிலாகவும், அரணுமாகவும் வைத்திருக்கிறாா்.இரட்சிப்பை மதிலாய் கொண்ட நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் !!!        
SHARE

Milan Tomic

Hi. I’m Designer of Blog Magic. I’m CEO/Founder of ThemeXpose. I’m Creative Art Director, Web Designer, UI/UX Designer, Interaction Designer, Industrial Designer, Web Developer, Business Enthusiast, StartUp Enthusiast, Speaker, Writer and Photographer. Inspired to make things looks better.

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

உங்கள் நாமம் பரலோகில் எழுதப்பட்டுள்ளது

“உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள்.” • (லூக்கா 10:20). பிரியமானவர்களே, ஆவிகள் உங்களுக்குக் கீழ்...