Top Social Icons

இன்றைய நினைவூட்டல் 'நீங்கள் ஞானமற்றவர்களைப்போல நடவாமல்'

நீங்கள் ஞானமற்றவர்களைப்போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப்போலக் கவனமாய் நடந்துகொள்ளப்பார்த்து, எபேசியர் 5:15.

நாம் பரத்திலிருந்து ஞானமுள்ளவர்களென்றால் அதின் தன்மை நிச்சயமாக நம்மில் வெளிப்படும்.

ஞானம் உள்ளவர்கள் எல்லோரோடும் சமாதானமாக வாழ முயற்சி செய்வார்கள். கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள். ரோமர் 12:18.

சமாதானமாக வாழ முயற்சி செய்வார்கள் சாந்தகுணத்தை வெளிப்படுத்துவார்கள். உங்கள் சாந்தகுணம் எல்லா மனுஷருக்கும் தெரிந்திருப்பதாக. கர்த்தர் சமீபமாயிருக்கிறார். பிலிப்பியர் 4:5.

ஞானமுள்ளவர்கள் தேவனுடைய வார்த்தைக்கு இணங்கி நடப்பார்கள். கர்த்தாவே, என்னை இணங்கப்பண்ணினீர், நான் இணங்கினேன், எரேமியா 20:7.

ஞானம் உள்ளவர்கள் இரக்கம் உள்ளவர்களாக இருப்பார்கள். உங்கள் பிதா இரக்கமுள்ளவராயிருக்கிறதுபோல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாயிருங்கள். லூக்கா 6:36.

ஞானம் உள்ளவர்கள் நற்கனி உள்ளவர்களாயிருப்பார்கள். நல்ல மரம் கெட்ட கனிகளைக் கொடுக்கமாட்டாது, கெட்ட மரம் நல்ல கனிகளைக் கொடுக்கமாட்டாது. மத்தேயு 7:18.

ஞானம் உள்ளவர்கள் எல்லோரையும் சமமாக மதித்து செயல்படுவார்கள். பட்சபாதமுள்ளவர்களாயிருப்பீர்களானால், பாவஞ்செய்து, மீறினவர்களென்று நியாயப்பிரமாணத்தால் தீர்க்கப்படுவீர்கள். யாக்கோபு 2:9.

ஞானம் உள்ளவர்கள் வெளிவேஷம் உள்ள வாழ்க்கை வாழமாட்டார்கள். மாம்சத்தின்படி நல்வேஷமாய்க்காணப்பட விரும்புகிறவர்கள் எவர்களோ, அவர்கள் தாங்கள் கிறிஸ்துவினுடைய சிலுவையினிமித்தம் துன்பப்படாதபடிக்கே.... கலாத்தியர் 6:12.


SHARE

Milan Tomic

Hi. I’m Designer of Blog Magic. I’m CEO/Founder of ThemeXpose. I’m Creative Art Director, Web Designer, UI/UX Designer, Interaction Designer, Industrial Designer, Web Developer, Business Enthusiast, StartUp Enthusiast, Speaker, Writer and Photographer. Inspired to make things looks better.

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

உங்கள் நாமம் பரலோகில் எழுதப்பட்டுள்ளது

“உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள்.” • (லூக்கா 10:20). பிரியமானவர்களே, ஆவிகள் உங்களுக்குக் கீழ்...