அதற்குத் தாவீது: நான் இப்பொழுது செய்தது என்ன? நான் வந்ததற்கு முகாந்தரம் இல்லையா என்று சொல்லி...
• (1 சாமுவேல் 17:29).
ஆண்டவருடைய பிள்ளைகள் எங்கு சென்றாலும், ஒரு நோக்கம் உண்டு! அந்த நோக்கத்தின் வழியாக, தேவனுடைய திட்டம் மிகச்சரியாக செயல்படுத்தப்படும்!
யுத்தக் களத்துக்கு தாவீது சென்றது யுத்தத்தை வேடிக்கை பார்ப்பதற்கு அல்ல! மொத்த இஸ்ரவேலுக்கும், கோலியாத் மூலமாக வந்த பிரச்சனையை தாவீது கண்ட போது தான் அங்கே சென்ற முகாந்திரத்தை அறிந்து கொண்டார். விருத்தசேதனம் என்ற உடன்படிக்கைக்கு உட்பட்டிராத, அந்த கோலியாத்தை, தான் ஏற்கனவே கொன்ற ஒரு கரடியை போல; ஒரு சிங்கத்தை போல ஒரு விலங்காகவே பார்த்தார்! ஒரே கல்லால் அடித்து வெற்றி பெற்றார். அது மொத்த இஸ்ரவேலுக்குமான வெற்றியாக மாறியது! தாவீதின் வாழ்க்கையிலும் அன்று முதற்கொண்டு பெரிய மாறுதல்கள் நேரிட்டன.
நாம் குறிப்பிட்ட குடும்பத்தில் பிறந்து இருப்பதற்குக் கூட ஒரு நோக்கம் உண்டு! நாம் ஒரு குறிப்பிட்ட சபையில் இருப்பதற்கும் ஒரு நோக்கம் உண்டு! நாம் குறிப்பிட்ட இடத்தில் வாழ்வதற்கு ஒரு நோக்கம் உண்டு! அந்த தேவ நோக்கம் என்னவென்று உணர்ந்து அதை நிறைவேற்ற தொடங்குவோம்!
சிந்திக்க : 📖🌟📖
• நாம் எங்கே சென்றாலும் அங்கே நம்மை குறித்த தேவனுடைய திட்டம் என்ன சித்தம் என்ன நாம் அங்கே இருப்பதன் முகாந்திரம் என்ன என்பதை கண்ணோக்கி பார்த்து தேவனுடைய பெலத்தோடு அதை நிறைவேற்றினால் அது மிக அழகாக இருக்கும்.
• நாம் இருக்கிற இடத்தில் தேவ திட்டம் நிறைவேறும்! தேவ திட்டம் இல்லாத இடத்தில் நாம் இருக்கமாட்டோம்! ஆமென்.
0 comments:
Post a Comment