நான் இங்கே கிறிஸ்தவ வாழ்க்கையில் எல்லாம் இலவசமா? என்பதை பற்றியே சொல்ல வருகிறேன்.
ஒரு ஆண் அல்லது பெண் திருமணம் செய்கிறார்கள் என்றால் இலவசமாகக் கூட திருமணம் செய்து கொள்ள முடியும்; ஆனால் திருமணத்திற்கு பிற்பாடு ஒரு ஆண் நல்ல கணவனாக இருக்க வேண்டுமானால், ஒரு பெண் நல்ல மனைவியாக தொடர்ந்து வாழ வேண்டுமானால்;அந்த ஆண் அல்லது பெண் பெரிய கிரயத்தை செலுத்தியே ஆகவேண்டும்; அது போலவே கிறிஸ்தவ வாழ்க்கையிலும் . இரட்சிக்கப்படுவது சுலபம்; அதற்கு ஒரு மனிதன் எவ்விதமான கிரயத்தையும் செலுத்த வேண்டியதில்லை. நாம் எந்த கிரயத்தை செலுத்தினாலும் இரட்சிப்பை பெறயியலாது. கர்த்தர் இயேசு அதற்க்கான கிரயத்தை செலுத்தி விட்டார். நாம் பெற்றுக் கொள்ளத்தான் முடியும். ஆனால் ஒரு நல்ல கிறிஸ்தவனாக வாழ வேண்டுமானால் நிச்சயமாக கிரயம் செலுத்தியே ஆகவேண்டும். கிறிஸ்தவத்தில் இரட்சிப்பு மட்டுமே இலவசம். காரணம் இரட்சிப்பை நம்மால் விலை கொடுத்து வாங்கிட முடியாது என்பதாலே அது இலவசமாக நமக்கு தரப்படுகிறது. இரட்சிப்பை மனிதனால் எவ்விதத்திலும் வாங்கிட முடியாது என்பதினாலே அது இலவசம்.
பாவஇருள் நிறைந்த இவ்வுலகில் நாம் ஒரு நல்ல கிறிஸ்தவராக வாழ வேண்டுமென்றால் நிச்சமாக கிரயம் செலுத்தியே தீரவேண்டும்; வேறு வழியே கிடையாது.
0 comments:
Post a Comment