ஆனபடியினாலே, நீங்கள் ஞானமற்றவர்களைப்போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப்போலக் கவனமாய் நடந்துகொள்ளப்பார்த்து...
• (எபேசியர் 5:15).
எல்லோரையுமே வேதம் ஞானம் பெற்றவர்கள் என்று அழைப்பதில்லை! அதே சமயத்தில் எல்லோரையுமே ஞானம் அற்றவர்கள் என்றும் அழைப்பது இல்லை! ஆனால், ஞானமற்றவர்களைப் போல நடவாமல் ஞானம் உள்ளவர்களை போல கவனமாய் நடந்து கொள்ள அறிவுறுத்துகிறது.
இந்த குறிப்பிட்ட வசனத்தில் காலத்தை பயன்படுத்துவதை குறித்த ஒரு ஞானத்தை வேதம் பேசுகிறது. நமக்கு கிடைத்திருக்கும் ஒவ்வொரு கணத்தையும் நாம் பயன்படுத்த வேண்டிய விதத்தைக் குறித்து கவனமாக இருக்க வேண்டியது மிக முக்கியம்.
ஞானம் அற்றவர்கள் என்ன செய்கிறார்கள் வெறுமனே பொழுது போக்குகிறார்கள் அல்லது அடுத்து சிந்தைக்கு இடம் கொடுத்து மோசம் போகிறார்கள். துன்மார்க்கருக்கு ஏதுவான மதுபான வெறிகொண்டு அலைகிறார்கள். ஆகாமிய கூடாரங்களில் வாசம் செய்கிறார்கள்.
தேவ பிள்ளைகள் செய்ய வேண்டியது என்ன அதே பரிசுத்த வேதம் சொல்லுகிறது.. "நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்." (எபேசியர் 5:16) - என்று. எப்படி காலத்தைப் பிரயோஜனப்படுத்துவது? "சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம்பண்ணி, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே எப்பொழுதும் எல்லாவற்றிற்காகவும் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரித்து,
தெய்வபயத்தோடே ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள். (எபேசியர் 5:19-21).
சிந்திக்க : 🔆🌟📖
எந்த ஒரு நேரத்திலும் தேவனுக்கு பிரியமானதை நாம் செய்து கொண்டிருந்தால், நம் காலங்கள் நன்மையாக இருக்கும். அதில் கவனமாய் இருப்போம்! ஞானம் உள்ளவர்களாய் நடப்போம்! இயேசு வருகிறார்! ஆமென்!
0 comments:
Post a Comment