மீட்டுக் கொள்வார்!
"என் ஜனங்களுடைய வேதனையை அறிந்திருக்கிறேன்" ( யாத். 3:7)
நீங்கள் கர்த்தருடைய ஜனங்களாக, அவருடைய சுதந்தரங்களா இருக்கிறபடியால், அவர் உங்களது ஒவ்வொரு பாடுகளையும் அறிந்திருக்கிறார்.
எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரவேலரை மீட்டது போலவே, உங்களது எல்லா அடிமைத்தனத்தின் வேதனையிலுமிருந்து, உங்களை மீட்டுக் கொள்வார்.
"நான் வேதனைப்பட்டு ஒடுங்கினேன்; நாள் முழுதும் துக்கப்பட்டுத் திரிகிறேன்" (சங். 38:6)
தாவீதின் சிறுமையையெல்லாம், அறிந்த கர்த்தர், தாவீதின் சத்துருக்களின் முன்பாக, ஒரு பந்தியை ஆயத்தம்பண்ணி, தாவீதை தமது பரிசுத்த ஆவியின் எண்ணெயால் அபிஷேகித்தார். மென்மேலும் பெலப் படுத்தினார்.
"நான் போகும் வழியை அவர் அறிவார்" (யோபு 23:10)
கர்த்தர், நீங்கள் போகும் உபத்திரவத்தின் பாதையையும், வேதனையின் பாதையையும், நிச்சயமாகவே அறிவார். நிச்சயமாகவே உங்களுடைய எல்லாப் பிரச்சனைகளின் மத்தியிலும், எல்லா சூழ்நிலைகளிலும் உங்களுக்கு ஜெயம் தருவார்.
யோபு பக்தன் சென்ற வழி, யாராலும் அறிந்து கொள்ள முடியாத வழியா இருந்தது. அவருடைய மனைவி அவரை தூஷித்து, கைவிட்டாள். அவருடைய நண்பர்கள், "ஆலோசனை" என்ற பெயரில், வெந்த புண்ணில் வேலைப் பாச்சினார்கள்.
அந்த பாடுகளின் மத்தியிலும், யோபு பக்தன் சொன்னார், "நான் போகும் வழியை அவர் அறிவார். அவர் என்னை சோதித்தபின், நான் பொன்னாக விளங்குவேன்" என்றார்.
"தேவனில் அன்புகூருகிறவனெவனோ, அவன் தேவனால் அறியப் பட்டிருக்கிறான்" (1கொரி. 8:3)
இன்று கர்த்தர் அன்போடு, "மகளே, உங்களுடைய கண்ணீரை மாற்ற நான் வல்லமையுள்ளவரா இருக்கிறேன். உங்கள் வேதனைகளை நீக்க நான் உயிருள்ளவரா இருக்கிறேன்" என்று சொல்லி, உங்களைத் தேற்றுகிறார்.
நீங்கள் செல்லுகிற ஒவ்வொரு பாதையையும் அறிந்த தேவன், இன்று உங்களை ஆசீர்வாதத்தின் பாதையிலே திருப்புவார். தூக்கி சுமந்து செல்லுவார். ஆமேன்!
0 comments:
Post a Comment