இன்றைய நினைவூட்டல்
கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக் கொண்டேன் என்று கூறியும் பிற சபையைச் சார்ந்தவர்களை சகோதரனாக ஏற்று அன்புகூருதல் அவசியம். பிற சபையாரை சகோதரனாக ஏற்றுக்கொள்ளாதோர் இன்னும் பாவம் என்னும் இருளிலே வாழ்கின்றனர்.
தன் சகோதரனைப் பகைக்கிறவன் இதுவரைக்கும் இருளிலே இருக்கிறான்.
1 யோவான் 2:9. தன் சகோதரனைப் பகைக்கிறவன் இருளிலே இருந்து இருளிலே நடக்கிறான். 1யோவான் 2:11.
சகோதரனிடம் அன்புகூராதோர் மறுபடியும் பிறக்கவில்லையென்றும் அப்படிப்பட்டோர் கொலை பாதகன் என்று வேதம் கூறுகிறது.
நீதியைச் செய்யாமலும் தன் சகோதரனில் அன்புகூராமலும் இருக்கிற எவனும் தேவனால் உண்டானவனல்ல. 1 யோவான் 3:10. தன் சகோதரனைப் பகைக்கிற எவனும் மனுஷ கொலைபாதகனாயிருக்கிறான். 1 யோவான் 3:15.
சகோதரனிடம் அன்புகூராதோர் உண்மை கிறிஸ்தவன் அல்ல மாய்மாலக்காரர். தேவனிடத்தில் அன்புகூருகிறேனென்று ஒருவன் சொல்லியும், தன் சகோதரனைப் பகைத்தால், அவன் பொய்யன். 1யோவான் 4:20.
நாம் கிறிஸ்துவின் கிரியைகள் நிறைந்த கிறிஸ்தவர்களா அல்லது கிறிஸ்தவன் என்று கூறியும் கிரியையில் கிறிஸ்துவை மறுதலிப்பவரா நம்மை ஆராய்ந்து பார்ப்போம்.
ஏனென்றால் கிறிஸ்துவை விசுவாசிக்கிறேன் என்று கூறியும் சகோதரனை நேசிக்காவிட்டால் நித்திய ஜீவன் பெற்றிட வாய்ப்பில்லை. தன் சகோதரனைப் பகைக்கிற எவனும் மனுஷ கொலைபாதகனாயிருக்கிறான். மனுஷ கொலைபாதகனெவனோ அவனுக்குள் நித்தியஜீவன் நிலைத்திராது என்று அறிவீர்கள். 1யோவான் 3:15.
0 comments:
Post a Comment